பதிவு செய்த நாள்
29 நவ2011
00:10
சென்னை: எல் அண்டு டி இன்ப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ் கம்பெனி, வரிச் சலுகையுடன் கூடிய கடன்பத்திரங்களை வெளியிட்டுள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுனீத் மகேஸ்வரி கூறியதாவது:நிறுவனம், அடிப்படை கட்டுமான நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இதற்கான பகுதி நிதியை திரட்டிக் கொள்ளும் வகையில், 80 சி.சி.சி.எப் வரிச் சலுகையுடன் கூடிய, கடன் பத்திரங்களை வெளியிட்டு 1,100 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, முதலீட்டாளர்கள் 20 ஆயிரம் ரூபாய் வரை வரிச் சலுகை பெறலாம்.இக்கடன் பத்திரங்கள் ஒவ்வொன்றும், 1,000 ரூபாய் முகமதிப்பு கொண்டவை. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 5,000 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். இதற்கு, 9 சதவீத வட்டி வழங்கப்படும். மேலும், இதன் முதிர்வு காலம் 10 ஆண்டுகள். இக்கடன் பத்திரங்களுக்கு கிரிசில் மற்றும் இக்ரா நிறுவனங்கள் "ஏஏ+' தரச் சான்றிதழ் வழங்கியுள்ளன. இக்கடன்பத்திர வெளியீடு வரும் டிசம்பர் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இவ்வாறு சுனீத் மகேஸ்வரி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|