எல் அண்டு டி இன்ப்ரா கடன் பத்திரங்கள் வெளியீடுஎல் அண்டு டி இன்ப்ரா கடன் பத்திரங்கள் வெளியீடு ... இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பொதுத்துறை வங்கிகளின் வர்த்தகத்திற்கு புதிய இலக்கு : நிதியமைச்சகம் அதிரடி உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2011
00:11

-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-
அடுத்த நான்கு ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகள், குறிப்பிட்ட இலக்கில் அவற்றின் வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும் என்று, மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை இது போல் உத்தரவு எதையும் நிதியமைச்சகம் பிறப்பித்ததில்லை என வங்கித் துறையினர் தெரிவித்துள்ளனர். மத்திய நிதியமைச்சகம் வங்கித் துறையை மேம்படுத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் நிதியமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு: வரும் 2015ம் ஆண்டிற்குள் பொதுத்துறை வங்கிகள் திரட்டும் மொத்த டெபாசிட்டுகளில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு("காசா') ஆகியவற்றின் பங்களிப்பை 40சதவீதமாக உயர்த்த வேண்டும். வங்கிகள் அவற்றின் சொத்துக்கள் மீதான வருவாயை 1.5 சதவீதம்அதிகரிக்க வேண்டும். ஒரு வங்கிப் பணியாளர் அடிப்படையிலான நிகர லாபம் உயர்த்தப்பட வேண்டும். வருவாய்க்கும், செலவினத்திற்கு உள்ள இடைவெளியை குறைக்க முயற்சிக்க வேண்டும். வங்கிகளின் டெபாசிட் மற்றும் கடன்களின்சந்தை மதிப்பு உயத்தப்பட வேண்டும். வங்கிகள் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மொத்த எண்ணிக்கையில், 80 சதவீத பணியாளர்கள், வங்கிக் கிளை பணிகளிலும், 20 சதவீதப் பணி அலுவலகப் பணிகளில் ஈடுபடும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வங்கிகளின் வசூலாகாத கடன்கள், அவற்றின் முந்தைய இரண்டு ஆண்டுகளின் காணப்பட்டதை விட, குறைய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூலதன இருப்பு:மேற்கண்ட இலக்கில், 60 சதவீதத்தை இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டும். எஞ்சிய 40 சதவீத இலக்கு, வரும் 2015ம் ஆண்டிற்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.வங்கிகள், போதுமான அளவிற்கு மூலதன இருப்பு விகிதத்தை அதிகரித்துக் கொள்வதற்கும், அவற்றின் வளர்ச்சிக்கும் தேவையான நிதியுதவி வழங்கப்படும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளுக்கு, பொதுத்துறை வங்கிகள், அவற்றின் நிர்வாக குழுவிடம் ஒப்புதல் பெற்று, மத்திய நிதியமைச்சகத்திடம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புரிந்துணர்வு ஒப்பந்தம்நிதியமைச்Œகத்தின் இந்த திட்டங்களுக்கு அனைத்து வங்கிகளும் ஒப்புதல் அளித்த பிறகு, இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகும்.
சர்வதேச வங்கித்துறையின் பேரில்3 தர நிர்ணயப்படி, பொதுத்துறை வங்கிகள் அவற்றின் மூலதன இருப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளன. இதற்காக, அடுத்த 8-10 ஆண்டுகளில், மத்திய அர” நிதியுதவி வழங்க வேண்டும் என்று வங்கிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அனைத்து பொதுத்துறை வங்கிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டவுடன், வங்கிகளுக்கும், மத்திய நிதியமைச்சகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.நிதியமைச்சகத்தின் உத்தரவு குறித்து வங்கியாளர் ஒருவர் கூறுகையில், " வங்கிகளின் மொத்த டெபாசிட்டில், "காசா' கணக்கு 40 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற இலக்கு மிகவும் கடினமானது. ஏனெனில்,பெரும்பாலான வங்கிகளின் பங்களிப்பு, இதை விட மிகக் குறைவாகவே உள்ளது என்று தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகளில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகியவை தவிர, வேறு எந்த வங்கியின் "காசா' கணக்கும் 40 சதவீத அளவிற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சேர்த்து முதலீட்டின் மீதான வருவாயை 1.5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கும் பல வங்கிகளுக்கு கடினமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற 2010-11ம் நிதியாண்டில்,பொதுத்துறை வங்கிகளின் சொத்து முதலீடு மீதான வருவாய் 0.96 சதவீதமாக உள்ளது. அதே சமயம், தனியார் துறையில், புதிதாக களமிறங்கும் வங்கிகளின் சொத்து முதலீடு மீதான வருவாய் 1.51 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம்நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து புதிய கொள்கைகளை அவ்வப்போது அறிவிக்கின்றன. ரிசர்வ் வங்கி, கடந்த 19 மாதங்களில் வங்கிகளுக்கான வட்டியை 3.75 சதவீதம் உயர்த்தியுள்ளது.வட்டி விகித உயர்வால், வங்கிகளின் நிகர வட்டி வருவாய் குறையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய நிதியமைச்சகத்தின் அதிரடி உத்தரவு வங்கி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)