பதிவு செய்த நாள்
30 நவ2011
00:51
மும்பை:கிரெடிட் கார்டு வாயிலாக கடன் பெற்று, குறித்த காலத்திற்குள் பணத்தை திரும்ப செலுத்த தவறுவோருக்கான அபராதத்தை குறைப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.மேலும், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு பதிலாக, மொபைல்போன் வாயிலாக பணம் செலுத்துவதை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மேற் கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளை சீரமைப்பது தொடர்பாக, மத்திய நிதியமைச்சகம், குழு ஒன்றை நியமித்துள்ளது. நிதிச்சேவைகள் செயலர் டீ.கே. மிட்டல் தலைமையிலான இக்குழு, அதன் பரிந்துரைகளை மத்திய நிதியமைச்சகத்திற்கு அளித்துள்ளது.
அதில், எதிர்காலத்தில் பணப் பரிமாற்றங்களுக்கான முக்கிய சாதனமாக மொபைல்போன்கள் விளங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகையிலானசேவைக்கு,தேசிய அளவிலான அடிப்படை கட்டமைப்பு வசதிகள்தேவை என்றும், இதன் மூலம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு மாற்றாக, மொபைல்போன் வாயிலான பணப் பரிவர்த்தனை வளர்ச்சி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும், இணையதளம் வாயிலான பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாகவும், மொபைல்போன் உருவெடுக்கும்.
இது தவிர, மின்னணு பணப் பரிவர்த்தனை, பணப் பரிமாற்ற நிறுவனங்கள், ஏ.டி.எம்., செயல்பாடுகள் உள்ளிட்டவற்றிலும், பல்வேறு சீர்திருத்தக் கருத்துக்களை, குழு பரிந்துரைத்துள்ளது.இக்குழுவின் பரிந்துரைப்படி, கிரெடிட் கார்டு கடனை குறித்த காலத்தில் செலுத்த தவறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தை குறைப்பது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
பொதுவாக, கிரெடிட் கார்டு கடனை திரும்ப செலுத்த தவறுவோருக்கு, வங்கிகள், 36 சதவீத வட்டியை வசூலிக்கின்றன. ஒரு சில வாடிக்கையாளர்களிடம், 50 சதவீத வட்டி வசூலிக்கப் படுகிறது. இதனை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.இந்திய கிரெடிட் கார்டு சந்தையில், எச்.டீ.எப்.சி., வங்கி, 28 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, 22 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்திலும், ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா, 13 சதவீத பங்களிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
கிரெடிட் கார்டு வாயிலான சராசரி பரிவர்த்தனை அதிகரித்துள்ளதால், அதற்கான செலவினம் குறைக்கப்படவேண்டும் என, மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதையொட்டி, மொபைல்போன் வாயிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க,தேவையான நடவடிக்கை களை எடுக்க உள்ளது.மொபைல்போன் வாயிலான பணப் பரிவர்த்தனை அதிகரித்தால், விசா மற்றும் மாஸ்டர் கார்டுபோன்ற சர்வதேச பணப் பரிமாற்ற நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|