எல் அண்டு டி காற்றாலை மின் உற்பத்தியில் களம் இறங்க திட்டம்எல் அண்டு டி காற்றாலை மின் உற்பத்தியில் களம் இறங்க திட்டம் ... தங்கம் விலை: சவரன் ரூ.22 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை: சவரன் ரூ.22 ஆயிரத்தை நெருங்குகிறது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கிரெடிட் கார்டு அபராதத்தை குறைக்க அரசு பரிசீலனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2011
00:51

மும்பை:கிரெடிட் கார்டு வாயிலாக கடன் பெற்று, குறித்த காலத்திற்குள் பணத்தை திரும்ப செலுத்த தவறுவோருக்கான அபராதத்தை குறைப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.மேலும், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு பதிலாக, மொபைல்போன் வாயிலாக பணம் செலுத்துவதை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மேற் கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளை சீரமைப்பது தொடர்பாக, மத்திய நிதியமைச்சகம், குழு ஒன்றை நியமித்துள்ளது. நிதிச்சேவைகள் செயலர் டீ.கே. மிட்டல் தலைமையிலான இக்குழு, அதன் பரிந்துரைகளை மத்திய நிதியமைச்சகத்திற்கு அளித்துள்ளது.

அதில், எதிர்காலத்தில் பணப் பரிமாற்றங்களுக்கான முக்கிய சாதனமாக மொபைல்போன்கள் விளங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகையிலானசேவைக்கு,தேசிய அளவிலான அடிப்படை கட்டமைப்பு வசதிகள்தேவை என்றும், இதன் மூலம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு மாற்றாக, மொபைல்போன் வாயிலான பணப் பரிவர்த்தனை வளர்ச்சி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும், இணையதளம் வாயிலான பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாகவும், மொபைல்போன் உருவெடுக்கும்.
இது தவிர, மின்னணு பணப் பரிவர்த்தனை, பணப் பரிமாற்ற நிறுவனங்கள், ஏ.டி.எம்., செயல்பாடுகள் உள்ளிட்டவற்றிலும், பல்வேறு சீர்திருத்தக் கருத்துக்களை, குழு பரிந்துரைத்துள்ளது.இக்குழுவின் பரிந்துரைப்படி, கிரெடிட் கார்டு கடனை குறித்த காலத்தில் செலுத்த தவறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தை குறைப்பது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
பொதுவாக, கிரெடிட் கார்டு கடனை திரும்ப செலுத்த தவறுவோருக்கு, வங்கிகள், 36 சதவீத வட்டியை வசூலிக்கின்றன. ஒரு சில வாடிக்கையாளர்களிடம், 50 சதவீத வட்டி வசூலிக்கப் படுகிறது. இதனை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.இந்திய கிரெடிட் கார்டு சந்தையில், எச்.டீ.எப்.சி., வங்கி, 28 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, 22 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்திலும், ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா, 13 சதவீத பங்களிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
கிரெடிட் கார்டு வாயிலான சராசரி பரிவர்த்தனை அதிகரித்துள்ளதால், அதற்கான செலவினம் குறைக்கப்படவேண்டும் என, மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதையொட்டி, மொபைல்போன் வாயிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க,தேவையான நடவடிக்கை களை எடுக்க உள்ளது.மொபைல்போன் வாயிலான பணப் பரிவர்த்தனை அதிகரித்தால், விசா மற்றும் மாஸ்டர் கார்டுபோன்ற சர்வதேச பணப் பரிமாற்ற நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)