பதிவு செய்த நாள்
02 டிச2011
00:30
மும்பை:அன்னிய நிதி நிறுவனங்கள், சென்ற நவம்பர் மாதத்தில், 62 ஆயிரத்து 296 கோடி ரூபாய் மதிப்பிற்கு, இந்தியாவில் நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன. அதே சமயம், 65 ஆயிரத்து 559 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களைவிற்பனை செய்துள்ளன. ஆக, சென்ற மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், அவற்றின் மொத்த முதலீட்டில் இருந்து 3,263 கோடி ரூபாயை அதிகளவில் திரும்பப் பெற்றுள்ளன.
நடப்பாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், இதுவரை, இந்தியாவில் நிறுவனப் பங்குகள்மற்றும் கடன் பத்திரங்கள் சந்தையில், 17 ஆயிரத்து 480 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. சென்ற 2010ம் ஆண்டில், இது, ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 674 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.சென்ற நவம்பர் மாதம், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்கு விற்பனை மூலம், 4,198 கோடி ரூபாயை திரும்பப் பெற்றன. அதே சமயம், 935 கோடி ரூபாய் மதிப்பிற்கு, கடன் பத்திரங்களில் முதலீடு செய்தன.சென்ற ஆகஸ்ட் மாதம், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களின் விற்பனை வாயிலாக, 8,000 கோடி ரூபாயை திரும்பப் பெற்றன. இது, கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, ஒரே மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள் திரும்பப் பெற்ற, அதிகபட்சத் தொகையாகும் என "செபி' அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|