பதிவு செய்த நாள்
02 டிச2011
16:32
டோக்கியோ : ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹோண்டா மோட்டார் நிறுவனம், சர்வதேச அளவில் 3,04,000 வாகனங்களை திரும்பப் பெற உள்ளதாக அறிவித்து்ள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் அக்கார்டு, சிவிக், ஒடிஸி, பைலட், சிஆர்-வி மற்றும் மற்ற மாடல் கார்களிலும் உள்ள ஏர் பேக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே, நிறுவனம் கார்களை திரும்பப் பெறுவதற்கான காரணமாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கோளாறினால் அமெரிக்காவில் 2009ம் ஆண்டில் மட்டும் 20 விபத்துகள் நடைபெற்றுள்ளதாகவும், இதில் 2 பேர் மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில், 2,73,000 வாகனங்களும், கனடாவில் 27,000 வாகனங்களும் ஜப்பானில் 2 ஆயிரம் வாகனங்களும் மற்றும் மற்ற நாடுகளிலிருந்து 2 ஆயிரம் வாகனங்கள் திரும்பப் பெற உள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறி்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|