ஐதராபாத்தில் டிசைன் சென்டர் அமைக்கிறது ஸ்மார்ட்பிளேஐதராபாத்தில் டிசைன் சென்டர் அமைக்கிறது ஸ்மார்ட்பிளே ... மந்தநிலையில் அடிப்படை கட்டமைப்பு துறை மந்தநிலையில் அடிப்படை கட்டமைப்பு துறை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு வெளியீடு:ஐ.ஆர்.டீ.ஏ., புதிய விதிமுறை அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2011
01:07

ஐதராபாத்:ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில் இறங்கி, நிதி திரட்டுவதற்கு, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டீ.ஏ.,) புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.இதன்படி, ஒரு காப்பீட்டு நிறுவனம், 10 ஆண்டுகள் முழுமையாக, சிறப்பான அளவில் செயல்பட்டிருக்க வேண்டும். மேலும், பங்கு வெளியீட்டிற்கு, "செபி' அமைப்பிடம் அனுமதி பெறுவதற்கு முன்பாக, ஐ.ஆர்.டீ.ஏ.,விடம் அனுமதி பெற வேண்டும். அப்படி பெறப்பட்ட முன் அனுமதியும் ஒரு வருட காலத்திற்கே செல்லத்தக்கதாக இருக்கும்.புதிய பங்கு வெளியீட்டில் ஈடுபட விரும்பும் நிறுவனங்கள், அனுமதி பெறப்பட்ட ஒரு வருட காலத்திற்குள் மூலதனச் சந்தையில் களமிறங்கி, நிதி திரட்டிக் கொள்ள வேண்டும்.
கடந்த ஆறு காலாண்டுகளில், இடர்பாட்டு நிதி வலிமையோடு செயல்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்த பிறகே, ஐ.ஆர்.டீ.ஏ., ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வழங்கும்.இது குறித்து, ஐ.ஆர்.டீ.ஏ., அமைப்பின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது பங்குச் சந்தை நிலவரம் சாதகமாக இல்லாததால், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மூலதனச் சந்தையில் களமிறங்குவதில் ஆர்வம் காட்டாது' என்று தெரிவித்தார்.இந்தியாவில், ஐ.ஆர்.டீ.ஏ.,வின் அனுமதி பெற்று, 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், நான்கு அல்லது ஐந்து நிறுவனங்கள் மட்டுமே, 10 ஆண்டுகால செயல்பாடுகளை கொண்டவையாக உள்ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)