பதிவு செய்த நாள்
03 டிச2011
01:07
ஐதராபாத்:ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில் இறங்கி, நிதி திரட்டுவதற்கு, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டீ.ஏ.,) புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.இதன்படி, ஒரு காப்பீட்டு நிறுவனம், 10 ஆண்டுகள் முழுமையாக, சிறப்பான அளவில் செயல்பட்டிருக்க வேண்டும். மேலும், பங்கு வெளியீட்டிற்கு, "செபி' அமைப்பிடம் அனுமதி பெறுவதற்கு முன்பாக, ஐ.ஆர்.டீ.ஏ.,விடம் அனுமதி பெற வேண்டும். அப்படி பெறப்பட்ட முன் அனுமதியும் ஒரு வருட காலத்திற்கே செல்லத்தக்கதாக இருக்கும்.புதிய பங்கு வெளியீட்டில் ஈடுபட விரும்பும் நிறுவனங்கள், அனுமதி பெறப்பட்ட ஒரு வருட காலத்திற்குள் மூலதனச் சந்தையில் களமிறங்கி, நிதி திரட்டிக் கொள்ள வேண்டும்.
கடந்த ஆறு காலாண்டுகளில், இடர்பாட்டு நிதி வலிமையோடு செயல்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்த பிறகே, ஐ.ஆர்.டீ.ஏ., ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வழங்கும்.இது குறித்து, ஐ.ஆர்.டீ.ஏ., அமைப்பின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது பங்குச் சந்தை நிலவரம் சாதகமாக இல்லாததால், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மூலதனச் சந்தையில் களமிறங்குவதில் ஆர்வம் காட்டாது' என்று தெரிவித்தார்.இந்தியாவில், ஐ.ஆர்.டீ.ஏ.,வின் அனுமதி பெற்று, 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், நான்கு அல்லது ஐந்து நிறுவனங்கள் மட்டுமே, 10 ஆண்டுகால செயல்பாடுகளை கொண்டவையாக உள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|