மந்தநிலையில் அடிப்படை கட்டமைப்பு துறைமந்தநிலையில் அடிப்படை கட்டமைப்பு துறை ... இந்தியன் பேங்க் என்.ஆர்.ஈ. டெபாசிட்டிற்கு வட்டி உயர்வு இந்தியன் பேங்க் என்.ஆர்.ஈ. டெபாசிட்டிற்கு வட்டி உயர்வு ...
3 பொதுத் துறை நிறுவனங்களில் அரசு பங்குமுதல் விலக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2011
01:12

புதுடில்லி:இழப்பைக் கண்டு வரும், 3 பொதுத்துறை நிறுவனங்களில், மத்திய அரசு அதன் பங்குகளை விற்பனை செய்து விட்டு, வெளியேற முடிவு செய்துள்ளது.இது குறித்து, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், துறை அமைச்சர்பிரபுல் படேல் பார்லிமெண்டில் தெரிவித்துள்ள விவரம்:உள்நாட்டில் நீர் வழி சரக்குப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும், சென்ட்ரல் இன்லேண்டு வாட்டர் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், ஸ்கூட்டர்தயாரிப்பில் ஈடுபட்ட ஸ்கூட்டர்ஸ் இந்தியா, டயர் தயாரிப்பு வர்த்தகம் புரியும் டயர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்கள், இழப்பை சந்தித்து வருகின்றன.
இதனால் இந்நிறுவனங்களில், மத்திய அரசு கொண்டுள்ள பங்குகளை விற்பனை செய்ய பொதுத்துறை நிறுவனங்கள் சீரமைப்பு வாரியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று, ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி, சென்ட்ரல் இன்லேண்டு வாட்டர் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில், மத்திய அரசு கொண்டுள்ள, 100சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படும். அது போன்று மேற்கு வங்கத்தை சேர்ந்த டயர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், அனைத்து பங்குகளும் விற்பனை செய்யப்படும்.
இது தவிர, ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தில், மத்திய அரசு கொண்டுள்ள, 95.38 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்ற 2009-10ம் ஆண்டில், பொதுத்துறையை சேர்ந்த, 59 நிறுவனங்கள், 15 ஆயிரத்து, 842 கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)