இந்தியாவின் இயற்கை ரப்பர் உற்பத்தி 9.44 லட்சம் டன்னாக இருக்கும்இந்தியாவின் இயற்கை ரப்பர் உற்பத்தி 9.44 லட்சம் டன்னாக இருக்கும் ... தங்கம் பவுனுக்கு ரூ. 72 குறைந்தது தங்கம் பவுனுக்கு ரூ. 72 குறைந்தது ...
ஆட்டம் புராசசர்களுடன் ஸ்‌மார்ட்போன்கள் வர்த்தகத்தில் களமிறங்குகிறது இன்‌டெல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2011
09:06

மும்பை : கம்ப்யூட்டர் சிப்கள் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக விளங்கும் இன்டெல் நிறுவனம், ஆட்டம் புராசசர்களுடன் ஸ்மார்ட்போன்கள் வர்த்தகத்தில் அடுத்த ஆண்டில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இன்டெல் நிறுவன புராசசர்களுடன் கூகுள் டிவி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது, அதுமட்டுமல்லாது, அல்ட்ராபுக்ஸ் மற்றும் டேப்லெட் பிசிக்களில் இந்த புராசசர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இது‌தொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த இன்டெல் டெக்னாலஜி (இந்தியா மற்றும் தெற்காசியா) விற்பனை பிரிவு இயக்குனர் ரவிச்சந்திரன் கூறியதாவது, ஆட்டம் புராசசருடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் வர்த்தகத்தில், 2012ம் ஆண்டில் களமிறங்க இன்டெல் நிறுவனம் தீர்மானித்துள்ளது. தற்போதைய அளவில், இன்டெல் நிறுவன ஆட்டம் புராசசருடன் கூடிய ஏசர், ஆசஸ் மற்றும் லெனோவா பிராண்ட் அல்ட்ராபுக்குகளுககு மிகுந்த வரவேற்பு உள்ளது, இதனை கருத்தில் கொண்டு, மேலும் பல புது மாடல்களை வரும் காலங்களிலும் அறிமுகப்படுத்த உள்ள‌ோம்.

ஸமார்ட்போன்கள் மற்றும் நோட்புக்களில், பணப் பரிமாற்ற வசதியை அறிமுகப்படு்ததும் பொருட்டு, மாஸ்டர்கார்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள‌ோம். இன்டெல் ஐடென்டிடி புரொடெக்சன் என்று பெயரிடப்பட்டுள்ள இம்முறையின் மூலம், பாதுகாப்பான பணப் பரிமாற்றத்தை பெறுவதற்கான வாய்ப்பை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)