நியூயார்க்கில் அலுவலகம் அமைக்கிறது பேஸ்புக்நியூயார்க்கில் அலுவலகம் அமைக்கிறது பேஸ்புக் ... நேரடி வரி வருவாய் ரூ.3லட்சம் கோடியாக வளர்ச்சி: -பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து- நேரடி வரி வருவாய் ரூ.3லட்சம் கோடியாக வளர்ச்சி: -பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் ... ...
ஒரே டிக்கெட்டில் அனைத்து வகையான பயணம் : விரைவில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2011
16:36

புதுடில்லி : பஸ், டாக்சி, ஆட்டோரிக்ஷா மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரு அட்டையை வைத்து பயணம் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளிக்கிறது மத்திய நகர்ப்புர மேம்பாட்டுத்துறை அமைச்சகம். "காமன் மொபிலிட்டி கார்டு" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் புரோட்டோடைப்பை, தலைநகர் டில்லியில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கமல்நாத் வெளியிட்டார். வரும் காலங்களில், நகரங்களில் உள்ள மக்கள் பஸ், டாக்சி, ஆட்டோரிக்ஷா மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரே அட்டையை பயன்படுத்தி பயணம் செய்வதன் அடிப்படையிலேயே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை மேலும் விஸ்தரிக்கும் பொருட்டு, மாநில அரசுகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களுடன், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட உள்ளது. இதுதொடர்பாக, மாநில அரசுகளளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் கார்டு வகையில் உருவாக்கப்பட உள்ள இந்த காமன்மொபிலிட்டி கார்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புழக்கத்தில் உள்ள பயண கட்டணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ளது. இந்த கார்டு, போக்குவரத்திற்கு மட்டும் பயனபடப் போவது மட்டுமல்லாது, சுங்கச்சாவடி வரி மற்றும் வாகன நிறுத்தம் கட்டணம் உள்ளிட்டவைகளுக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த காமன் மொபிலிட்டி கார்டின் மூலம், டிக்கெட்களை பிரிண்ட் செய்வதற்கான செலவு, பேப்பரின் செலவு மற்றும் பிரிண்ட் செய்வதற்கான செலவு உள்ளிட்டவைகள் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில், இந்த திட்டம் "ஆக்டோபஸ் கார்டு" என்ற முறையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)