ஒரே டிக்கெட்டில் அனைத்து வகையான பயணம்  : விரைவில் அறிமுகம்ஒரே டிக்கெட்டில் அனைத்து வகையான பயணம் : விரைவில் அறிமுகம் ... பொது மக்களுக்கான வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டு அளவு 38 சதவீதமாக அதிகரிப்பு பொது மக்களுக்கான வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டு அளவு 38 சதவீதமாக அதிகரிப்பு ...
நேரடி வரி வருவாய் ரூ.3லட்சம் கோடியாக வளர்ச்சி: -பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2011
00:35

நடப்பு 2011-12ம் நிதியாண்டின்,ஏப்ரல் முதல் டிச.,1ம் தேதி வரையிலான நிலவரப்படி,நாட்டின் நேரடி வரி வசூல் 3 லட்சத்து 3 ஆயிரத்து 650 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மத்திய அரசு,நடப்பு 2011-12ம் நிதியாண்டில்நேரடி வரி வாயிலாக,5 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், பணவீக்கம்,வட்டி விகித உயர்வு உள்ளிட்ட காரணங்களால் நாட்டின் தொழில் உற்பத்தி வளர்ச்சி குன்றியுள்ளது. இதனால், நிறுவனங்கள் செலுத் தும் முன்கூட்டிய வரி, எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

முன்னணி நிறுவனங்கள்நடப்பு நிதியாண்டில், சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், நாட் டின் 100முன்னணி நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி 9.9 சதவீத அளவிற்கு உள்ளது.இது,ஏப்ரல்-ஜூன் வரை யிலான முதல் காலாண்டில்19 சதவீதமாக இருந்தது.நிறுவனங்கள்,அக்டோபர்-டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண் டிற்கு செலுத்தும்முன்கூட்டிய வரிக்கான கெடுவரும் 15ம் தேதியோடு முடிவடைகிறது.அதன் பின்னர் தான்,நிறு வனங் கள் செலுத்திய முன்கூட்டிய வரி குறித்த இறுதிவிவரம் தெரிய வரும். எனினும், நடப்பு நிதியாண்டில்,ஏப்ரல் முதல் டிச., 1ம் தேதி வரையிலான காலத்தில், நாட்டின் நேரடி வரி வசூல் 3 லட்சத்து 3 ஆயிரத்து 650 கோடி ரூபாயாக உயர்ந் துள்ளது.
நிகர வரி வருவாய் இதே காலத்தில், கூடுதலாக செலுத்தப்பட்ட 68 ஆயிரத்து 918 கோடி ரூபாய் திரும்ப அளிக்கப் பட்டுள்ளது. ஆக,மதிப்பீட்டு காலத்தில், நாட்டின் நேரடி நிகர வரி வருவாய் 2லட்சத்து 34 ஆயிரத்து 732 கோடி ரூபா யாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில் 2 லட்சத்து 15 லட்சத்து 659 கோடி ரூபாயாக இருந்தது. வசூலிக்கப்பட்ட2 லட்சத்து 34ஆயிரத்து732 கோடி ரூபாய் நிகர நேரடி வரி வருவாயில்,நிறுவனங்கள் செலுத்திய வரி, 1 லட்சத்து 47ஆயிரத்து 225 கோடி ரூபாயாகவும், வருமான வரி வசூல்,85 ஆயிரத்து 535 கோடி ரூபாயாகவும் உள்ளது. பங்கு பரிவர்த்தனை வரியாக 3 ஆயிரத்து 344 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில், மொத்த நேரடி வரி வசூல், 20 சதவீதம் அதிகரித்து 2 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது, சென்ற 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில், 2 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.சென்ற 2010-11ம் நிதியாண்டின், இதே காலத்தில் நிகர நேரடி வரி,முந்தைய ஆண்டு இதே காலத்தை விட 7.1 சதவீதம் அதிகரித்து2 லட்சத்து 19ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், கூடுதலாக செலுத்தப்பட்ட வரியை திரும்ப செலுத்திய பிறகு, நிகர நேரடி வரி வருவாய் 2 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.
பொருளாதார வளர்ச்சி :நாட்டின் வரி வருவாயை அதிகரிக்க, வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.எனினும்,உள்நாட்டு மொத்த உற்பத்தி அடிப்படையிலான, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சென்ற ஆண்டைவிட குறைந்துள்ளதால், மொத்த வரி வசூல் குறைந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித் தார். சென்ற செப்டம்பர் வரையிலான காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.9 சதவீதமாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டு இதே காலத்தில் 8.4 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது.
பங்கு விற்பனை:நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூல த னத்தில், குறிப்பிட்ட பங்குகளை விற்பனை செய்து, 40ஆயிரம் கோடிரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.ஆனால், சர்வதேச நிலவரம் காரணமாக, பங்குச்சந்தை சரிவைக் கண்டுள்ளதால்,இதுவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில்,10 சதவீதத்தை கூட திரட்ட முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், நாட்டின் நிதிப் பற்றாக் குறை, இலக்கு அளவான 4.6 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, சர்வதேச நிதி ஆய்வு நிறுவனமான, சிட்டி குழுமம்,நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்,நிதிப் பற்றாக்குறை 5.1- 5.8 சதவீதமாக உயரும் என தெரிவித்துள்ளது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)