பதிவு செய்த நாள்
04 டிச2011
23:41
மும்பை: கடந்த வாரம், இரும்புத் தாதுவின் விலை, 11 சதவீதம் சரிவடைந்துள்ளது. சீனாவில், இதற்கான தேவை குறைந்து வருவதே, இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. உருக்கு பொருட்கள் தயாரிப்பிற்கான மூலப் பொருட்களை கொள்முதல் செய்வதில், சீனா முன்னணியில் உள்ளது.சென்ற வாரம் ஒரு டன் இரும்புத் தாதுவின் விலை, 130.80 டாலர் என்ற அளவில் இருந்தது. இது, நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு காணப்படும் சரிவாகும். எனினும், அக்டோபர் மாதம் இதன் விலை உயர்ந்திருந்தது.உருக்கு பயன்பாடு மற்றும் உற்பத்தியில் சீனா முன்னணியில் உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக, 16.60 லட்சம் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்யப்படுவதாக, சீனாவின் உருக்கு மற்றும் ஸ்டீல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், கட்டுமானம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறைகளில் மந்த நிலை நிலவிய போதும், நடப்பு 2011ம் ஆண்டில், உருக்கிற்கான தேவை, 8 முதல் 9 சதவீதம் வரையில் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டில், இதன் உற்பத்தி திறனை, 1.20 கோடி டன் கூடுதலாக அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மத்திய உருக்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த இரும்புத் தாது ஏற்றுமதி, 6 - 6.5 கோடி டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில், இதன் ஏற்றுமதி, 9.76 கோடி டன்னாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|