பதிவு செய்த நாள்
05 டிச2011
09:43
சென்னை:கிலோ 1,000 ரூபாய் அளவிற்கு, மல்லிகைப் பூ விலை உயர்ந்துள்ளதால், கோயம்பேட்டில், அவற்றை வாங்கிச் செல்ல முடியாமல், சில்லரை வியாபாரிகள் திரும்பிச் சென்றனர்.சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பெரியபாளையம், கும்மிடிபூண்டி, ஆத்துப்பாக்கம், ஊத்துக்கோட்டை, நாகலாபுரம், திருத்தணி, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மல்லிகைப் பூக்களின் வரத்து இருக்கும்.இந்த மாதத்தில் அதன் சீசன் இருக்காது. இதனால், மார்க்கெட்டிற்கு அதன் வரத்து பெரியளவில் குறைந்தது. கடந்த இரண்டு தினங்களாக, 50 கிலோ முதல் 70 கிலோ வரையே வரத்து இருந்தது. கோவில்களில் வழிபாடுகளுக்காக, மல்லிகையின் தேவை அதிகரித்துள்ளது.
முகூர்த்த நாட்கள் தொடர்வதால், மல்லிகைப் பூக்களுக்கு அதிக கிராக்கி உள்ளது.இதனால், குறைந்த அளவிலாவது வாங்கிச் செல்ல சில்லரை வியாபாரிகள் வந்திருந்தனர். அதிகாலையில், கிலோ மல்லிகைப் பூ விலை 1,200 ரூபாய் வரை விற்கப்பட்டதால், சில்லரை விலையில் விற்பது கடினம் என்று வியாபாரிகள் திரும்பிச் சென்றனர். திருமணத்துக்காக, கூடுதல் விலையும் பொருட்படுத்தாது, பலர் அதிக விலைக்கும் வாங்கிச் சென்றனர்.
கோயம்பேடு பூ மார்க்கெட் மொத்த வியாபாரி மூக்கையா கூறுகையில்,"மல்லிகைப் பூ மார்க்கெட்டிற்கு, நாள் ஒன்றுக்கு 10 டன்னுக்கும் அதிகமாக வரத்து இருக்கும். சீசன் இல்லாததால், கிலோ கணக்கில் வரத்து இருப்பதே விலை உயர்வுக்குக் காரணம். மதுரை பகுதியிலும், மழை அதிகரித்து உற்பத்தி குறைவு என்பதால் வரத்தை சரி கட்டமுடியவில்லை. விலை நிரந்தரமாக குறைவதற்கு, நாம் பிப்ரவரி மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|