இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீடு ரூ.10,300 கோடிஇந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீடு ரூ.10,300 கோடி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு ...
மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.1,200
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2011
09:43

சென்னை:கிலோ 1,000 ரூபாய் அளவிற்கு, மல்லிகைப் பூ விலை உயர்ந்துள்ளதால், கோயம்பேட்டில், அவற்றை வாங்கிச் செல்ல முடியாமல், சில்லரை வியாபாரிகள் திரும்பிச் சென்றனர்.சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பெரியபாளையம், கும்மிடிபூண்டி, ஆத்துப்பாக்கம், ஊத்துக்கோட்டை, நாகலாபுரம், திருத்தணி, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மல்லிகைப் பூக்களின் வரத்து இருக்கும்.இந்த மாதத்தில் அதன் சீசன் இருக்காது. இதனால், மார்க்கெட்டிற்கு அதன் வரத்து பெரியளவில் குறைந்தது. கடந்த இரண்டு தினங்களாக, 50 கிலோ முதல் 70 கிலோ வரையே வரத்து இருந்தது. கோவில்களில் வழிபாடுகளுக்காக, மல்லிகையின் தேவை அதிகரித்துள்ளது.
முகூர்த்த நாட்கள் தொடர்வதால், மல்லிகைப் பூக்களுக்கு அதிக கிராக்கி உள்ளது.இதனால், குறைந்த அளவிலாவது வாங்கிச் செல்ல சில்லரை வியாபாரிகள் வந்திருந்தனர். அதிகாலையில், கிலோ மல்லிகைப் பூ விலை 1,200 ரூபாய் வரை விற்கப்பட்டதால், சில்லரை விலையில் விற்பது கடினம் என்று வியாபாரிகள் திரும்பிச் சென்றனர். திருமணத்துக்காக, கூடுதல் விலையும் பொருட்படுத்தாது, பலர் அதிக விலைக்கும் வாங்கிச் சென்றனர்.
கோயம்பேடு பூ மார்க்கெட் மொத்த வியாபாரி மூக்கையா கூறுகையில்,"மல்லிகைப் பூ மார்க்கெட்டிற்கு, நாள் ஒன்றுக்கு 10 டன்னுக்கும் அதிகமாக வரத்து இருக்கும். சீசன் இல்லாததால், கிலோ கணக்கில் வரத்து இருப்பதே விலை உயர்வுக்குக் காரணம். மதுரை பகுதியிலும், மழை அதிகரித்து உற்பத்தி குறைவு என்பதால் வரத்தை சரி கட்டமுடியவில்லை. விலை நிரந்தரமாக குறைவதற்கு, நாம் பிப்ரவரி மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)