பதிவு செய்த நாள்
08 டிச2011
11:16
மும்பை : பல்வேறு பகுதிகளில் வாழும் வாடிக்கையாளர்களுக்கு நிதி சேவை புரிவும், அவர்களிடையே வீட்டு திட்டங்களை அறிமுகம் செய்வதற்காகவும் தனியார் துறை நிறுவனமான ஐசிஐசிஐ வங்கியுடன், கோத்ரேஜ் ப்ராபர்ட்டீஸ் நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதியிலும் உள்ள வாடிக்கையாளர்களிடையே தனது புதிய வீட்டுமனை திட்டங்களை அதிகப்படுத்த இவ்விரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. பணவீக்கம், வீட்டுக்கடன் தொகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வாடிக்கையாளர்களின் கனவு இல்லம் ஆசை நிறைவேறாமல் ஆகிவிடாமல் இருப்பதற்காகவே இது போன்ற திட்டங்களை உருவாக்குவதாக கோத்ரேஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபுகள், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இந்த திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|