பதிவு செய்த நாள்
10 டிச2011
00:21
சென்னை:சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம், 2009-10ம் ஆண்டிற்கான, சிறந்த பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதிக்கான இ.இ.பி.சி. அமைப்பின் வெள்ளி விருதினை வென்றுள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சர்வதேச பிரிவு) சைதன்யா பி.கொரான்னோ கூறியதாவது:சர்வதேச அளவில், நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக இவ்விருதினை கருதுகிறோம். நிறுவனத்தின் செயல்பாடுகளில் கொண்ட உறுதிப்பாடு, நம்பகத்தன்மை மற்றும் புதுமைகளை புகுத்துதல் ஆகியவற்றின் காரணமாக தொடர்ந்து 8 ஆண்டுகளாக இவ்விருதை பெற்று வருகிறோம். விவசாயம், சுரங்கம், தொழிற்சாலை, வீட்டு உபயோகம், கழிவு நீர் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் பயன்படக்கூடிய நிறுவனத்தின் தயாரிப்புகள் சுமார் 70 நாடுகளில் விற்பனையாகின்றன. தற்போது கிடைத்துள்ள இந்த வெள்ளி விருது, எங்களின் செயல்பாடுகளை மேலும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.இவ்வாறு சைதன்யா கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|