பதிவு செய்த நாள்
10 டிச2011
00:22
சென்னை:தனியார் துறையைச் சேர்ந்த பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனம், பங்குச் சந்தையுடன் இணைந்த (யுலிப்) உத்திரவாத முதிர்வு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் (மார்கெட்டிங் மேனேஜ்மென்ட்) ரிதுராஜ் பட்டாசார்ஜீ கூறுகையில், " சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்களை அடிப்படையாக கொண்டு இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், மிக குறைந்தபட்சமாக, 5,000 ரூபாயை, ஒரு முறை பிரிமியமாக செலுத்தினால் போதுமானது. 10 வருட காலம் முழுவதிற்கும் ஆயுள் காப்பீடு உள்ளது. மேலும், இத்திட்டத்தில் ஒதுக்கீட்டிற்கான கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது. இதன் தனிச் சிறப்பாக, ஆயுள் காப்பீட்டுடன் முதலீடு செய்த தொகையில் குறைந்தபட்சம், 200 சதவீத தொகை காப்பீடு முதிர்வு அடையும் போது வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|