சென்னையில் பொறியியல் கண்காட்சிசென்னையில் பொறியியல் கண்காட்சி ... ஏற்றுமதி ரூ.9.63 லட்சம் கோடியாக உயர்வு ஏற்றுமதி ரூ.9.63 லட்சம் கோடியாக உயர்வு ...
மொபைல்போன் பயன்பாடு 88 கோடியாக உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2011
00:28

புதுடில்லி:இந்தியாவில், மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. சென்ற அக்டோபர் மாதத்தில், 70.79 லட்சம் வாடிக்கையாளர்கள், புதிதாக மொபைல் போன் சேவையை பெற்றுள்ளனர். இதனையடுத்து, அக்டோபர் இறுதி நிலவரப்படி, நாட்டின் ஒட்டுமொத்த மொபைல் போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை, முந்தைய மாதத்தை விட 0.89 சதவீதம் உயர்ந்து, 87.36 கோடியில் இருந்து 88.14 கோடியாக அதிகரித்துள்ளது.நாட்டில் மொபைல் போன் மற்றும் சாதாரண தொலைபேசியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, ஒட்டுமொத்த அளவில், 91.40 கோடியாக அதிகரித்துள்ளது என, இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த அளவில், மொபைல் போன் மற்றும் தொலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 91.40 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், இந்திய மக்கள் தொகை அடிப்படையிலான தொலைத் தொடர்பு அடர்த்தி, 76 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும், தொலைத் தொடர்பு சேவையை பயன்படுத்தியோர் குறித்த பட்டியல்படி, வாடிக்கையாளர் எண்ணிக்கை, 62.61 கோடியாக உள்ளது.சென்ற அக்டோபர் மாதத்தில், யூனினார் நிறுவனம், 26.6 லட்சம் புதிய மொபைல் போன் சேவைகளை வழங்கி, அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை, 3.23 கோடியாக உயர்த்தி கொண்டது.ஏர்டெல் நிறுவனம், 9 லட்சத்து 40 ஆயிரம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 17 கோடியே 37 லட்சமாக உயர்ந்துள்ளது.
வோடபோன் நிறுவனம், 9 லட்சத்து 20 ஆயிரம் சந்தாதாரர்களை சேர்த்துக் கொண்டதன் மூலம், இதன் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 14 கோடியே 59 லட்சமாக உயர்ந்துள்ளது.ஆதித்ய பிர்லா குழுமத்தின், ஐடியா செலுலார் நிறுவனம், 16 லட்சத்து 30 ஆயிரம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 10 கோடியே 18 லட்சமாக உயர்ந்துள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 4 லட்சத்து 80 ஆயிரம் அதிகரித்து, 6 கோடியே 28 லட்சமாக அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், 10 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டதன் மூலம், அதன் மொத்த வாடிக்கையாளரின் எண்ணிக்கை, 14 கோடியே 80 லட்சமாக அதிகரித்துள்ளது. எம்.டி.எஸ்., பிராண்டில் மொபைல் சேவை அளித்து வரும், எஸ்.எஸ்.டி.எல்., நிறுவனம், 7 லட்சத்து 40 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டதன் மூலம், அதன் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையை, 1 கோடியே 40 லட்சமாக உயர்த்திக் கொண்டுள்ளது.பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி. என்.எல்., ஆகிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 4 லட்சம் மற்றும் 31 ஆயிரத்து 788 என்ற அளவில் அதிகரித்து, முறையே 9 கோடியே 61 லட்சம் மற்றும் 56 ஆயிரம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)