மொபைல்போன் பயன்பாடு 88 கோடியாக உயர்ந்ததுமொபைல்போன் பயன்பாடு 88 கோடியாக உயர்ந்தது ... நடப்பு 2011-12ம் பருவத்தில் காபி உற்பத்தி 3.22 லட்சம் டன்னாக அதிகரிக்கும் நடப்பு 2011-12ம் பருவத்தில் காபி உற்பத்தி 3.22 லட்சம் டன்னாக அதிகரிக்கும் ...
ஏற்றுமதி ரூ.9.63 லட்சம் கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2011
00:29

புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, 19 ஆயிரத்து 270 கோடி டாலராக (9 லட்சத்து 63 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 33.2 சதவீதம் அதிகம் என, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை செயலர் ராகுல் குல்லார் தெரிவித்தார்.
இதே காலத்தில், நாட்டின் இறக்குமதி, 30.2 சதவீதம் அதிகரித்து, 30 ஆயிரத்து 950 கோடி டாலராக (15 லட்சத்து 47 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. கணக்கீட்டு காலத்தில், ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்துள்ளதால், வர்த்தக பற்றாக்குறை 11 ஆயிரத்து 680 கோடி டாலராக (5 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின், சென்ற நவம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 2,230 கோடி டாலராக (1 லட்சத்து 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உள்ளது. இதே மாதத்தில், நாட்டின் இறக்குமதி, 3,590 கோடி டாலராக (1 லட்சத்து 79 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) இருந்தது.இதையடுத்து, இம்மாதத்தில், வர்த்தக பற்றாக்குறை, 1,360 கோடி டாலராக (68 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது என குல்லார் குறிப்பிட்டார்.
நடப்பு முழு நிதியாண்டில், மத்திய அரசு, 30 ஆயிரம் கோடி டாலர் (15 லட்சம் கோடி ரூபாய்) அளவிற்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையால், இந்த ஏற்றுமதி இலக்கை எட்டுவதற்கு வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.சென்ற அக்டோபர் மாதத்தில், ஏற்றுமதியை விட, இறக்குமதி பன்மடங்கு அதிகரித்ததை அடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 1,960 கோடி டாலராக (98 ஆயிரம் கோடி ரூபாய்) மிகவும் அதிகரித்து காணப்பட்டது.ஆனால், அக்டோபரை விட, நவம்பர் மாதத்தில், வர்த்தக பற்றாக்குறை, 1,360 கோடி டாலராக (68 ஆயிரம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, குல்லார் மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)