பதிவு செய்த நாள்
10 டிச2011
00:29
மும்பை:ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனம், தன் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், "ரிலையன்ஸ் எனி டைம் மணி' என்ற கார்டை அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய கார்டை பயன்படுத்தி, சில்லரை முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் உடனடியாக முதலீடு செய்யலாம்.டெபிட் கார்டுகளில் உள்ள வசதிகளை பயன்படுத்தி, முதலீடு மேற்கொள்வது போல, தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மணி கார்டை பயன்படுத்தி, ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பது, இதன் தனிச் சிறப்பு.
இது குறித்து, ரிலையன்ஸ் கேப்பிட்டல் அசட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியுமான ஹிமன்சு வியபக் கூறியதாவது:கையிருப்பில் பணம் இல்லாததால் பல முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வதை ஒத்திப் போட்டு வந்தனர். இப்புதிய கார்டின் வாயிலாக, நினைத்த நேரத்தில், எந்த தடையும் இன்றி உடனடியாக முதலீட்டை மேற்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, உடனடியாக பணம் செலுத்தியதற்கான உறுதியான தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். ஆன் - லைன் மூலமாக, ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு மேற்கொண்டவர்களும், இப்புதிய வகை "ரிலையன்ஸ் எனி டைம் மணி' கார்டை பெறலாம். இவ்வாறு ஹிமன்சு வியபக் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|