பதிவு செய்த நாள்
10 டிச2011
00:32
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்றும், மிகவும் சுணக்கமாகவே இருந்தது. வியாழனன்று, அமெரிக்க பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இல்லாததால், வெள்ளியன்று, நமக்கு முன் வர்த்தகம் தொடங்கிய இதர ஆசிய பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் தொடக்கத்தில், வர்த்தகம் சற்று மந்தமாக இருந்தது என்றாலும், பின் ஓரளவிற்கு முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால், இது இந்திய பங்குச் சந்தையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், பொறியியல், வங்கி, மின்சாரம், எண்ணெய், எரிவாயு போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகள், குறைந்த விலைக்குக் கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 274.78 புள்ளிகள் வீழ்ச்சிகண்டு, 16,213.46 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,382.57 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,142.32 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 5 நிறுவன பங்குகள் தவிர, ஏனைய 25 நிறுவன பங்குகளின் விலை குறைந்திருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 76.95 புள்ளிகள் குறைந்து, 4,866.70 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,918.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,841.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|