பதிவு செய்த நாள்
10 டிச2011
09:21
டோக்கியோ : 2012ம் ஆமண்டு மார்ச் மாதத்திற்குள், ஐரோப்பிய சந்தையில் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதேபோல், 2016ம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பிய சந்தையில் 9 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யவும் பானோசோனிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, பானோசோனிக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச நாடுகளில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதில் முன்னணி இடத்தில் ஐரோப்பிய சந்தை உள்ளது. அடுத்த நிதியாண்டிற்குள், ஐரோப்பிய சந்தையில், 1.5 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய உள்ளோம். 2016ம் ஆண்டிற்குள், சர்வதேச அளவில் 15 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் ( ஐரோப்பிய சந்தையில் 9 மில்லியன் ஸ்மார்ட்போன்களும், ஜப்பான் சந்தைக்கு 6 மி்ல்லியன் ஸ்மார்ட்போன்களும், எஞ்சியவை ஆசியா, சீனா மற்றும் அமெரிக்க சந்தைகளில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|