பதிவு செய்த நாள்
10 டிச2011
12:45
பெங்களூரு : சர்வதேச அளவில் சாப்ட்வேர் துறையில் முன்னணி இடத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், பெங்களூருவில் குளோபல் டெலிவரி சென்டரை அமைத்துள்ளது. சர்வதேச நாடுகளில் உள்ள தங்களது கிளையண்ட்களுக்கு கன்சல்டிங் மற்றும் எண்டர்பிரைசஸ் சேவைகளை, இந்த சென்டரின் மூலம் வழங்க உள்ளது. இந்தியாவில், மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது குளோபல் டெலிவரி சென்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் குளோபல் டெலிவரி சென்டர், 2005ம் ஆண்டில் ஐதராபாத்தில் துவங்கப்பட்டது. ஐதராபாத்தில் இயங்கிவரும் குளோபல் டெலிவரி சென்டரின் மூலம், சர்வதேச அளவில், 65க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கிவரும் முன்னணி நிறுவனங்களுக்கு வர்த்தக ரீதியான மற்றும் செயல்பாடுகள் ரீதியான சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|