பதிவு செய்த நாள்
10 டிச2011
13:48
புதுடில்லி : இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை எண்ணெய் வர்த்தக நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (பிபீசிஎல்) நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 18 ஆயிரம் கோடி முதல் ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய பெட்ரோகெமிக்கல் பிளாண்ட்டை அமைக்க உள்ளது. அதோடு கொச்சியில் இயங்கிவரும் சுத்திகரிப்பு யூனிட்டின் செயல்பாடுகள் விரிவாக்கத்திலும் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் தவைரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான ஆர் கே சிங் கூறியதாவது, கொச்சியில் செயல்பட்டுவரும் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை, பன்னாட்டு நிறுவனத்தின் உதவியுடன் ரூ. 6 ஆயிரம் கோடி முதலீட்டில் விஸ்தரிக்கப்பட உள்ளது. தற்போது ஆண்டு ஒன்றிற்கு 9.5 மில்லியன் டன் என்ற அளவில் எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த நிதியாண்டிலிருந்து இந்த அளவை 15 மில்லியன் டன் என்ற அளவிற்கு அதிகரிக்க உள்ளதாக மேலும் அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|