பதிவு செய்த நாள்
11 டிச2011
11:10
திருப்பூர் : கார்த்திகை மாத விரதத்தால், நுகர்வோர் வருகை குறைந்துள்ளது; நெய்தல் அங்காடியில் மீன் விற்பனை 80 சதவீதம் சரிவடைந்தது.திருப்பூரில் மீன் விற்பனை செய்யும் நெய்தல் அங்காடிகள் குமார்நகர், வீரபாண்டி, புஷ்பா தியேட்டர், அவிநாசி ஆகிய நான்கு இடங்களில் செயல்படுகிறது. தென்மாவட்டங்களில் இருந்து கடல் மீன், பாலாறு, திரு மூர்த்தி அணை பகுதிகளில் இருந்து ஆற்று மீன் கொண்டுவரப்பட்டு, நான்கு கடைகளிலும் சேர்ந்து நாளொன்றுக்கு 700 கிலோ முதல் 1 டன் வரை மீன் விற்பனை நடந்துவந்தது. கார்த்திகை மாதம் துவங்கியதையடுத்து, அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கினர். விரதம் காரணமாக பெரும்பாலானோர் அசைவ உணவு களை தவிர்த்து சைவ உணவுக்கு மாறியதால், திருப்பூரில் நெய்தல் அங்காடிகள் நுகர்வோர் வரத்து இன்றி, வெறிச்சோடி காணப்படுகின்றன.வழக்கமாக நாளொன்றுக்கு 70 கிலோ வரை மீன் விற்பனை நடந்து வந்த குமார்நகர் அங்காடியில் கடந்த இரண்டு நாட்களாக முற்றிலும் மீன் விற்பனையின்றி காணப்படுகிறது. வீரபாண்டி, அவிநாசி, புஷ்பாதியேட்டர் மீன் அங்காடிகளிலும் தினமும் 15 கிலோ மட்டுமே மீன் விற்பனையாகிறது; நான்கு அங்காடிகளிலும் சேர்த்து மொத்தம் 20 சதவீதம் மட்டுமே மீன் விற்பனை நடக்கிறது.விற்பனை குறைந்ததால், மார்க்கெட்டில் கடல் மீன்கள் விலை குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, வஞ்சிரம் ரூ. 290; நெத்திலி 70; பாறை 160; ஊழி 120; முரல் 110; அயிலை 70; வாளை மீன் 140 ரூபாயாக விலை குறைந்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|