எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் இந்தியா சந்தை பங்களிப்பை உயர்த்த திட்டம்எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் இந்தியா சந்தை பங்களிப்பை உயர்த்த திட்டம் ... அடுத்த ஆண்டில் ரூ.100 கோடியை முதலீடு செய்கிறது வீடியோகான் அடுத்த ஆண்டில் ரூ.100 கோடியை முதலீடு செய்கிறது வீடியோகான் ...
கார்த்திகை விரதம்: மீன் விற்பனையில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2011
11:10

திருப்பூர் : கார்த்திகை மாத விரதத்தால், நுகர்வோர் வருகை குறைந்துள்ளது; நெய்தல் அங்காடியில் மீன் விற்பனை 80 சதவீதம் சரிவடைந்தது.திருப்பூரில் மீன் விற்பனை செய்யும் நெய்தல் அங்காடிகள் குமார்நகர், வீரபாண்டி, புஷ்பா தியேட்டர், அவிநாசி ஆகிய நான்கு இடங்களில் செயல்படுகிறது. தென்மாவட்டங்களில் இருந்து கடல் மீன், பாலாறு, திரு மூர்த்தி அணை பகுதிகளில் இருந்து ஆற்று மீன் கொண்டுவரப்பட்டு, நான்கு கடைகளிலும் சேர்ந்து நாளொன்றுக்கு 700 கிலோ முதல் 1 டன் வரை மீன் விற்பனை நடந்துவந்தது. கார்த்திகை மாதம் துவங்கியதையடுத்து, அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கினர். விரதம் காரணமாக பெரும்பாலானோர் அசைவ உணவு களை தவிர்த்து சைவ உணவுக்கு மாறியதால், திருப்பூரில் நெய்தல் அங்காடிகள் நுகர்வோர் வரத்து இன்றி, வெறிச்சோடி காணப்படுகின்றன.வழக்கமாக நாளொன்றுக்கு 70 கிலோ வரை மீன் விற்பனை நடந்து வந்த குமார்நகர் அங்காடியில் கடந்த இரண்டு நாட்களாக முற்றிலும் மீன் விற்பனையின்றி காணப்படுகிறது. வீரபாண்டி, அவிநாசி, புஷ்பாதியேட்டர் மீன் அங்காடிகளிலும் தினமும் 15 கிலோ மட்டுமே மீன் விற்பனையாகிறது; நான்கு அங்காடிகளிலும் சேர்த்து மொத்தம் 20 சதவீதம் மட்டுமே மீன் விற்பனை நடக்கிறது.விற்பனை குறைந்ததால், மார்க்கெட்டில் கடல் மீன்கள் விலை குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, வஞ்சிரம் ரூ. 290; நெத்திலி 70; பாறை 160; ஊழி 120; முரல் 110; அயிலை 70; வாளை மீன் 140 ரூபாயாக விலை குறைந்திருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)