பதிவு செய்த நாள்
11 டிச2011
16:20
புதுடில்லி : நடப்பு ஆண்டில் செய்திகளில் அதிகம் இடம்பெற்றவர்கள் பட்டியலில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் தேசியவாதி அன்னா ஹசாரே முதலிடத்தை பெற்றுள்ளதாக யாஹூ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் கவர்ச்சி, ஊழல், அரசியல் ஆகியன பின்னக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் யாஹூ தெரிவித்துள்ளது. அதிகம் செய்திகளில் இடம்பெற்றவர்கள் பட்டியலில் ஹசாரேவை தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் உள்ளனர். அரசுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் தொடர் போராட்டம், ராம்லீலா மைதானத்தில் அவர் நடத்திய 288 மணி நேர உண்ணாவிரதம் உள்ளிட்ட காரணங்களாலேயே அவர் முதலிடத்தை பெற்றுள்ளதாக யாஹூ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்கள் தவிர செய்திகளில் அதிகம் இடம்பெற்றவர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, அன்னா ஹசாரே குழு உறுப்பினர் கிரண் பேடி, அல் குவைதா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். இதேபோன்று இணையதளங்களில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலிலும் அன்னா ஹசாரேவே முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் சச்சின், நடிகை கத்ரீனா கைப் ஆகியோர் உள்ளதாக யாஹூ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|