பதிவு செய்த நாள்
12 டிச2011
00:06
மும்பை: வரும் ஜனவரி முதல், கார்களின் விலையை உயர்த்த, கார் தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
பணவீக்கம், எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும், அமெரிக்க டாலருக்கு எதிரான, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகிய காரணங்களால், கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், அதிக இடர்பாட்டை சந்தித்து வருகின்றன. கடந்த மூன்று மாதங்களில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 15 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால், கார் தயாரிப்பு நிறுவனங்கள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான, செலவினம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையொட்டி, வரும் ஜனவரியில், கார்களின் விலையை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.நாட்டின், இரண்டாவது மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, ஹுண்டாய் மோட்டார் இந்தியா, இன்னோவா, சான்ட்ரோ ஐ10, ஐ20, இயான், அசென்ட் மற்றும் வெர்னா என்ற பெயரில், கார்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம், அதன் கார் விலையை, 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை, உயர்த்த திட்டமிட்டுள்ளது. வரும், ஜனவரி முதல், விலை உயர்வு அமல்படுத்தப்படும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதேபோல், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், அதன் கார் விலையை, 1 முதல் 2 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம், ஜனவரி முதல் அதன் அனைத்து வகை மாடல் கார்களின் விலையையும், 3 சதவீதம் உயர்த்துவதாக, ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இவைதவிர, கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், மாருதி சுசூகி இந்தியா மற்றும் போர்டு இந்தியா நிறுவனங்களும், மேற்கண்ட பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. இந்நிறுவனங்களும், அதன் கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|