தேயிலை ஏற்றுமதி உயர்வுதேயிலை ஏற்றுமதி உயர்வு ... முன்னுரிமை துறைகளுக்கான வங்கிக் கடன் வளர்ச்சியில் தேக்கம் முன்னுரிமை துறைகளுக்கான வங்கிக் கடன் வளர்ச்சியில் தேக்கம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இறக்குமதி செலவின அதிகரிப்பால்... கார் விலையை உயர்த்த நிறுவனங்கள் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2011
00:06

மும்பை: வரும் ஜனவரி முதல், கார்களின் விலையை உயர்த்த, கார் தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
பணவீக்கம், எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும், அமெரிக்க டாலருக்கு எதிரான, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகிய காரணங்களால், கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், அதிக இடர்பாட்டை சந்தித்து வருகின்றன. கடந்த மூன்று மாதங்களில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 15 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால், கார் தயாரிப்பு நிறுவனங்கள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான, செலவினம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையொட்டி, வரும் ஜனவரியில், கார்களின் விலையை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.நாட்டின், இரண்டாவது மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, ஹுண்டாய் மோட்டார் இந்தியா, இன்னோவா, சான்ட்ரோ ஐ10, ஐ20, இயான், அசென்ட் மற்றும் வெர்னா என்ற பெயரில், கார்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம், அதன் கார் விலையை, 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை, உயர்த்த திட்டமிட்டுள்ளது. வரும், ஜனவரி முதல், விலை உயர்வு அமல்படுத்தப்படும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதேபோல், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், அதன் கார் விலையை, 1 முதல் 2 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம், ஜனவரி முதல் அதன் அனைத்து வகை மாடல் கார்களின் விலையையும், 3 சதவீதம் உயர்த்துவதாக, ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இவைதவிர, கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், மாருதி சுசூகி இந்தியா மற்றும் போர்டு இந்தியா நிறுவனங்களும், மேற்கண்ட பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. இந்நிறுவனங்களும், அதன் கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)