தேயிலை ஏற்றுமதி உயர்வுதேயிலை ஏற்றுமதி உயர்வு ... அதிநவீன மாடல்களில் பெண்களுக்கான "ஹேண்ட் பேக்' அதிநவீன மாடல்களில் பெண்களுக்கான "ஹேண்ட் பேக்' ...
முன்னுரிமை துறைகளுக்கான வங்கிக் கடன் வளர்ச்சியில் தேக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2011
00:08

புதுடில்லி: சென்ற அக்டோபர் மாதம், நாட்டின் முன்னுரிமைத் துறைகளுக்கு வங்கிகள் வழங்கிய கடன், 10 சதவீதம் வளர்ச்சிக் கண்டுள்ளது. இது, சென்ற 2010ம் ஆண்டு, இதே காலத்தில், 19.9 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது. வேளாண் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறுவது குறைந்துள்ளதால், வங்கிகள் வழங்கிய கடன், மிகச் சிறிய அளவிற்கே வளர்ச்சிக் கண்டுள்ளது.
சென்ற அக்டோபரில், முன்னுரிமைத் துறைகளுக்கு வங்கிகள், 12.48 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 11.35 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதில், வேளாண் மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கான கடன், 7.1 சதவீத வளர்ச்சிக் கண்டு, 4.35 லட்சம் கோடியாக உள்ளது. இது, சென்றாண்டு அக்டோபர் மாதம், 20.4 சதவீதம் வளர்ச்சிக் கண்டிருந்தது.
சென்ற அக்டோபரில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கடன், 17.4 சதவீதம் வளர்ச்சிக் கண்டு, 4.73 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, சென்றாண்டு இதே காலத்தில், 20 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.சென்ற அக்டோபர் மாதம், குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கடன், 13.3 சதவீதம் என்ற அளவில் எதிர்மறை வளர்ச்சிக் கண்டு, 24 ஆயிரத்து 601 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்தாண்டின் இதே மாதத்தில், இத்துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன், 50 சதவீதம் வளர்ச்சியைக் கண்டிருந்தது.வீட்டு வசதித் துறைக்கு, வங்கிகள் வழங்கிய கடன், 3.5 சதவீதம் வளர்ச்சி கண்டு 2.36 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இத்துறை, கடந்தாண்டு அக்டோபர் மாதம், 9.3 சதவீத வளர்ச்சியைக் கண்டிருந்தது.சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கான வங்கிகளின் கடன், சென்ற அக்டோபரில், 27.7 சதவீதம் வளர்ச்சிக் கண்டிருந்தது.முக்கியத் துறைகளில், வேளாண்துறை மற்றும் நலிந்த பிரிவினருக்கு, முதன்மை வட்டி விகிதத்தை விட, குறைவான வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதர துறைகளுக்கு இத்தகைய வட்டி மானியம் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)