முன்னுரிமை துறைகளுக்கான வங்கிக் கடன் வளர்ச்சியில் தேக்கம்முன்னுரிமை துறைகளுக்கான வங்கிக் கடன் வளர்ச்சியில் தேக்கம் ... அதிநவீன மாடல்களில் பெண்களுக்கான "ஹேண்ட் பேக்' அதிநவீன மாடல்களில் பெண்களுக்கான "ஹேண்ட் பேக்' ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பீ.பி.சி.எல்., நிறுவனம் ரூ.20,000 கோடியில் விரிவாக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2011
00:09

புதுடில்லி: பொதுத்துறையை சேர்ந்த பீ.பி.சி.எல்., நிறுவனம், பெட்ரோலிய பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இந்நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 18,000 - 20,000 கோடி ரூபாய் முதலீட்டு செலவில், பல்வேறு விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.முதல் கட்டமாக இந்நிறுவனம், கொச்சியில் உள்ள அதன் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்யவும் மற்றும் புதிய பெட்ரோ ரசாயன ஆலை நிறுவவும் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, கொச்சியில் 5,000 - 6,000 கோடி ரூபாய் முதலீட்டில், முக்கிய சிறப்பம்சங்கள் கொண்ட ரசாயன திட்டங்களை மேற்கொள்ள உள்ளது. இத்திட்டத்தின் மூலம், பல்வேறு வகையிலான பெட்ரோ ரசாயன வர்த்தகத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது என இந்நிறுவத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.தற்போது, கொச்சி ஆலையின் சுத்திரிகரிப்பு திறன், ஆண்டுக்கு 95 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. இதை ஆண்டுக்கு, 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி டன்னாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.தற்போது, புரோப்பலீன் அடிப்படையிலான ரசாயனப் பொருள்கள் இறக்குமதியை நம்பி உள்ளது. இந்த விரிவாக்க திட்டத்தின் வாயிலாக, உள்நாட்டிலேயே இப்பொருட்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.சுத்திகரிப்பு விரிவாக்க திட்டத்திற்கான செலவை நிறுவனமே ஏற்க உள்ளது. இதற்காக உரிமம் பெற்ற வெளிநாட்டு பங்குதாரரின் ஒத்துழைப்புடன், புதிய பெட்ரோ ரசாயன ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.மேலும், மத்திய பிரதேசம் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளின் சுத்திகரிப்பு திறனை, புதிய கூட்டுத் திட்டத்தின் வாயிலாக அதிகரிக்க உள்ளோம். இதன் வாயிலாக, மத்திய பிரதேசத்தில் உள்ள பினா ஆலையின் சுத்திகரிப்பு திறன் கூடுதலாக 30 லட்சம் டன் அதிகரித்து ஆண்டுக்கு 90 லட்சமாக உயரும். 1.20 கோடி டன்னாக உள்ள மும்பை ஆலையின் சுத்திகரிப்பு திறன் கூடுதலாக, ஆண்டுக்கு 20 - 30 லட்சம் டன் அதிகரிக்கும் என சிங் மேலும் தெரிவித்தார்.பீ.பி.சி.எல்., நிறுவனத்திற்கு, மும்பை, கொச்சி உள்ளிட்ட இடங்களை தவிர, அசாம் மாநிலத்தில், ஆண்டுக்கு, 30 லட்சம் டன் சுத்திகரிப்பு திறன் கொண்ட நுமலிகார்க் ஆலை ஒன்றும் செயல்பட்டு வருகிறது.



Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)