பதிவு செய்த நாள்
12 டிச2011
00:10
சேலம்: சேலம் நகரில், பெண்களை கவரும் வகையில், மும்பையில் இருந்து ஏராளமான அதிநவீன மாடல்களில், "ஹேண்ட்பேக்' வந்துள்ளது.
சிறுமியர் முதல் மூதாட்டி வரை தோள்களில், "ஹேண்ட்பேக்' அணிந்து செல்வது, தற்போது பேஷனாகி விட்டது. குறிப்பாக, ஆசிரியர்கள், அரசு அலுவலகங்களுக்கு செல்வோர், பணிக்கு செல்லும் பெண்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவியர் என அனைவரும், "ஹேண்ட் பேக்' பயன்படுத்துகின்றனர்.சேலம் நகரின் பல இடங்களில், இரண்டாம் ரக, "ஹேண்ட் பேக்'குகளின் விலை, 50, 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, பெண்களை கவரும் வகையில், ஏராளமான மாடல்களில், "ஹேண்ட்பேக்' வந்துள்ளது.சேலம், அழகாபுரம், "டயானா ஷாப்பி' உரிமையாளர்கள் ஜெய்னுல்ஆப்தின், முகமதுரபீக், ஷாகுல்அமீது ஆகியோர் கூறியதாவது:பொதுவாக, "ஹேண்ட்பேக்'குகள் மும்பையில் இருந்து வரத்தாகிறது. ரெக்ஸின், தோல் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட, "ஹேண்ட்பேக்'குகள் விற்பனைக்கு வந்துள்ளன. குழந்தைகள், சிறுமியர் பயன்படுத்தும் பேக்குகள், 70 முதல், 100 ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளது. பேன்ஸி பேக்குகள், 250 ரூபாய்க்கு பல வண்ணங்களில் கிடைக்கிறது.சிறுமியர் பயன்படுத்தும் பேக்குகள், பிறந்த நாள் பரிசாக குழந்தைகளுக்கு கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது, புதிதாக வரத்தாகியுள்ள, "ஹேண்ட்பேக்'குகளில் மொபைல் போன் வைக்கும் வகையில் தனி இடம் உள்ளது.விசிட்டிங் கார்டு, பணம் போன்றவை வைக்கும் வகையில், மூன்று இடங்களில், "ஜிப்' வசதி உள்ளது. மேலும், சிறிய கண்ணாடி, சீப்பு, பவுடர் போன்றவை வைக்கும் வகையில், பேக்கில் இடவசதி உள்ளது. இந்த வகையான பேக்குகள், 195 முதல், 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.தற்போது, தோள்களில், "ஹேண்ட்பேக்' மாட்டிக் கொண்டு செல்லும் பெண்களை, அனைத்து இடங்களிலும் பார்க்க முடிகிறது. "பேக்குகள்' அனைத்தும் பெண்களுக்கென்றே பிரத்யேகமாக வரவழைத்து விற்பனை செய்யப்படுகிறது.இவ்வாறு, ஜெய்னுல்ஆப்தின், முகமதுரபீக், ஷாகுல்அமீது கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|