பதிவு செய்த நாள்
12 டிச2011
00:11
ஈரோடு : ஈரோடு சந்தையில் மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை, குவிண்டாலுக்கு, 300 ரூபாய் வரை குறைந்துள்ளது.பொதுவாக, டிசம்பர் மாதங்களில், ஈரோடு சந்தைக்கு, 4,000 - 5,000 மூட்டை மஞ்சள் வரும். ஆனால், நடப்பு மாதம், இது மும்மடங்காக உயர்ந்து, 15 ஆயிரம் மூட்டைகளாக அதிகரித்துள்ளது. இதனால், மஞ்சள் விலை குறைந்துள்ளது. ஒரு குவிண்டால் மஞ்சள், 3,109 -4,295 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகிறது.புதிய மஞ்சள் வரத்து, இம்மாத இறுதியிலோ அல்லது வரும் ஜனவரி மாத தொடக்கத்திலோ சந்தைக்கு வரும். தற்போது, விவசாயிகளிடம், 11 லட்சம் மஞ்சள் மூட்டைகள் இருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், வரும் ஜனவரிக்குள், 1 லட்சம் மூட்டை மஞ்சள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சிய, 10 லட்சம் மஞ்சள் மூட்டைகள், விவசாயிகள் வசம் வரும் 2013ம் ஆண்டு வரை கையிருப்பில் இருக்கும்.சென்ற ஆண்டு, மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்ததால், விவசாயிகள் லாபமீட்டினர். இதனால், உபரியாக உள்ள மஞ்சளை, 2 ஆண்டுகள் வரை கையிருப்பில் வைத்திருக்கவும், விவசாயிகள் தயாராக இருப்பார்கள் என இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|