தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு ... அக்டோபரில் இந்திய தொழில்துறை உற்பத்தி சரிவு அக்டோபரில் இந்திய தொழில்துறை உற்பத்தி சரிவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஈரோட்டில் தக்காளி, கேரட் காய்கறிகள் விலை வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2011
13:56

ஈரோடு: ஈரோட்டில் கடந்த சில நாட்களாக தக்காளி, கேரட் உள்பட சில காய்கறிகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளன. கடந்த மாதத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் காய்கறி பயிர் செய்த தோட்டங்கள் நீரில் மூழ்கி, பயிர்கள் அழுகின. இதனால், காய்கறி வரத்து குறைந்து, பல்வேறு காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. தொடர்ந்து பெய்து வந்த மழை கடந்த சில வாரமாக நின்றதால், ஈரோட்டுக்கு குறிப்பிட்ட காய்கறிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் இரண்டு வாரத்துக்கு முன்பை காட்டிலும் தற்போது சில காய்கறிகளின் விலை வீழ்ச்சியாகிள்ளது. அதன்படி, கிலோ 27 ரூபாய் வரை விற்ற தக்காளி 12 ரூபாய்க்கும், 22 ரூபாய் வரை விற்ற புடலங்காய் 10 ரூபாய்க்கும், 23 ரூபாய்க்கு விற்ற பாவைக்காய் 18 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்ற கேரட் 30 ரூபாய்க்கும் நேற்று விற்கப்பட்டது. வெங்காயம் வரத்து அதிகரித்ததால், உலர்ந்த மற்றும் ஈரத்தன்மை கொண்ட வெங்காயம் கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும் விற்றது. சுரைக்காய் மட்டுமே தொடர்ந்து 5 முதல் 6 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கரிவேற்பிலை, கொத்தமல்லி வரத்து குறைந்ததால், அவையும் குறைந்தது 5 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதேபோல், பல காய்கறிகளின் விலை 10 ரூபாய் வரை குறைந்துள்ளது. குறிப்பிட்ட காய்கறிகளின் விலை வீழ்ச்சியாகியுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் நேற்று காய்கறி மார்க்கெட், பழமுதிர் சோலை உள்ளிட்ட இடங்களில் இந்த வாரத்துக்கு தேவையான காய்கறிகளை பெண்கள் அதிகளவில் மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)