பதிவு செய்த நாள்
12 டிச2011
13:56
ஈரோடு: ஈரோட்டில் கடந்த சில நாட்களாக தக்காளி, கேரட் உள்பட சில காய்கறிகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளன. கடந்த மாதத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் காய்கறி பயிர் செய்த தோட்டங்கள் நீரில் மூழ்கி, பயிர்கள் அழுகின. இதனால், காய்கறி வரத்து குறைந்து, பல்வேறு காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. தொடர்ந்து பெய்து வந்த மழை கடந்த சில வாரமாக நின்றதால், ஈரோட்டுக்கு குறிப்பிட்ட காய்கறிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் இரண்டு வாரத்துக்கு முன்பை காட்டிலும் தற்போது சில காய்கறிகளின் விலை வீழ்ச்சியாகிள்ளது. அதன்படி, கிலோ 27 ரூபாய் வரை விற்ற தக்காளி 12 ரூபாய்க்கும், 22 ரூபாய் வரை விற்ற புடலங்காய் 10 ரூபாய்க்கும், 23 ரூபாய்க்கு விற்ற பாவைக்காய் 18 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்ற கேரட் 30 ரூபாய்க்கும் நேற்று விற்கப்பட்டது. வெங்காயம் வரத்து அதிகரித்ததால், உலர்ந்த மற்றும் ஈரத்தன்மை கொண்ட வெங்காயம் கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும் விற்றது. சுரைக்காய் மட்டுமே தொடர்ந்து 5 முதல் 6 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கரிவேற்பிலை, கொத்தமல்லி வரத்து குறைந்ததால், அவையும் குறைந்தது 5 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதேபோல், பல காய்கறிகளின் விலை 10 ரூபாய் வரை குறைந்துள்ளது. குறிப்பிட்ட காய்கறிகளின் விலை வீழ்ச்சியாகியுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் நேற்று காய்கறி மார்க்கெட், பழமுதிர் சோலை உள்ளிட்ட இடங்களில் இந்த வாரத்துக்கு தேவையான காய்கறிகளை பெண்கள் அதிகளவில் மொத்தமாக வாங்கிச் சென்றனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|