கிரெடிட் கார்டு வணிகம் ரூ.9,000 கோடிகிரெடிட் கார்டு வணிகம் ரூ.9,000 கோடி ... உருக்கு உற்பத்தித் திறனை உயர்த்த ரூ.2.50 லட்சம் கோடி : - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - உருக்கு உற்பத்தித் திறனை உயர்த்த ரூ.2.50 லட்சம் கோடி : - பிசினஸ் ஸ்டாண்டர்ட் ... ...
ரானே குழுமம்: விற்பனையை உயர்த்த இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2011
00:24

சென்னை: சென்னையைச் சேர்ந்த, ரானே குழுமத்தின் விற்றுமுதல் தற்போது, 2,200 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதை இரண்டு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, ரானே ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர், எஸ். லட்சுமணன் தெரிவித்தார்.
ரானே குழுமம், அதன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதையொட்டி, சென்னையில் நடைபெற்ற விழாவில், "ரானேவின் வெற்றி வரலாறு' என்ற ஆங்கிலப் புத்தகத்தை, சுந்தரம் பாஸனர்ஸ் நிறுவன தலைவர் சுரேஷ் கிருஷ்ணா வெளியிட, டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் துணை தலைவர் முத்துராமன் பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில், லட்சுமணன் பேசியதாவது:
நிறுவனம், கடந்த 75 ஆண்டுகளாக, மோட்டார் வாகனங்களுக்குத் தேவையான ஸ்டியரிங், சஸ்பென்ஷன்கள், வால்வுகள், சீட் பெல்ட் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் பல்வேறு உதிரிபாகங்களைத் தயாரித்து வருகிறது. நிறுவனத்தின் மொத்த விற்பனையில், 15 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மொத்த உதிரிபாகங்கள் விற்பனையில், 40 சதவீதம் வர்த்தக வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன. மேலும் பல முக்கிய உதிரிபாகங்கள், இதர வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும், சில்லறை விற்பனை சந்தைக்கும் அளிக்கப்படுகின்றன.
ரானே குழுமத்தின் ஆண்டு விற்றுமுதல் தற்போது, 2,200 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதை இரண்டு மடங்காக உயர்த்தவும், நிறுவனத்தின் ஏற்றுமதியை, 20-25 சதவீதம் என்றளவில் அதிகரிக்கவும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, லட்சுமணன் பேசினார்.
முத்துராமன் பேசும்போது, "ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, அதில் பணிபுரியும் ஊழியர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே, நிறுவனங்கள் ஊழியர்களுக்குத் தேவையான, அனைத்து வசதிகளையும் சிறப்பாக செய்ய வேண்டும். இதற்கு, ரானே குழுமம் முன் உதாரணமாகத் திகழ்கிறது' என்றார்.
சுந்தரம் பாஸனர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசியதாவது:ரானே குழும நிறுவனங்கள், மோட்டார் வாகனத் துறைக்கு தேவையான பல்வேறு பாகங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இந்நிறுவனத்தின் தரமான தயாரிப்புகள் உள்நாட்டில் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில், இந்நிறுவனத்தின் விற்றுமுதலும், பணியாளர்கள் எண்ணிக்கையும், பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு, நிர்வாகம் மட்டுமின்றி, இதன் பணியாளர்களின் பங்களிப்பும் இன்றியமையாததாக உள்ளது. இவ்வாறு, சுரேஷ் கிருஷ்ணா பேசினார்.இந்நிகழ்ச்சியில், ரானே குழுமத்தின் தலைவர், எல்.கணேஷ், ரானே டி.ஆர். டபிள்யூ., ஸ்டியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ஹரிஷ் லட்சுமணன், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் செயல் துணை தலைவர், சேசஷாயி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)