தங்கம் விலை சற்று குறைந்ததுதங்கம் விலை சற்று குறைந்தது ... சென்ற நவம்பரில்... வேலைவாய்ப்பு அதிகரிப்பு சென்ற நவம்பரில்... வேலைவாய்ப்பு அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புதிய ஆலை திட்டத்தை ஒத்திப்போடும் மாருதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2011
14:35

கார் விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதால், குஜராத்தில் புதிய ஆலை கட்டும் திட்டத்தை ஒத்திவைக்க மாருதி முடிவு செய்துள்ளது. கார் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் மாருதி புதிய நிறுவனங்கள் வருகையால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. தொழிலாளர் ஸ்ட்ரைக், பெட்ரோல் விலை, கார் கடன் வட்டி உயர்வு ஆகிய காரணங்களாலும் மாருதியின் கார் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிலையில், எதிர்கால தேவையை சமாளிக்கும் விதமாக குஜராத்தில் புதிய ஆலை கட்டும் பணியில் மாருதி தீவிரமாக இறங்கியது. ரூ.4,000 கோடி முதலீட்டில் இந்த புதிய ஆலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. புதிய ஆலை அமைப்பதற்காக நிலத்தை தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த நிலையில், புதிய ஆலைக்கான நிலம் தேர்வு செய்யப்பட்டாலும் அதில் உடனடியாக ஆலை கட்டப்போவதில்லை என்று மாருதி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாருதி தலைவர் ஆர்.சி.பர்கவா கூறுகையில், "நீண்ட கால முதலீடுகளை சிறிது ஒத்திவைக்க உள்ளோம். குஜராத்தில் ஆலை கட்டுவதற்கான நிலம் தேர்வு பணிகள் தற்போது நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணிகள் நிறைவடையும். நிலம் தேர்வு செய்யப்பட்டாலும், ஆலை கட்டும் பணிகள் இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளுக்கு பின்னரே துவங்க திட்டமிட்டுள்ளோம். மார்க்கெட் நிலவரத்தை பொறுத்த ஆலை கட்டும் பணிகள் துவங்கப்படும். ஆனால், தற்போது இதுகுறித்து உறுதியாக எதையும் கூற இயலாது," என்றார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)