தங்கம் விலை சற்று குறைந்ததுதங்கம் விலை சற்று குறைந்தது ... மத்திய அரசின் மெத்தனப்போக்கால்... துறைமுக வளர்ச்சித் திட்டங்களில்தேக்க நிலை மத்திய அரசின் மெத்தனப்போக்கால்... துறைமுக வளர்ச்சித் திட்டங்களில்தேக்க ... ...
சென்ற நவம்பரில்... வேலைவாய்ப்பு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2011
00:24

புதுடில்லி:பல்வேறு துறைகளில் சுணக்க நிலை காணப்பட்ட போதிலும், சென்ற நவம்பர் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், அதிகளவில் பணியாளர்களை தேர்ந்தெடுத்துள்ளதாக இன்போ எட்ஜ் குழுமத்தின் ஓர் அங்கமான, நோக்ரி டாட் காம் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தையொட்டி, அக்டோபரில், நிறுவனங்கள், பணியாளர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் குறைந்திருந்தது. மேலும், கடந்த 12 மாதங்களுக்கு பிறகு தொய்வடைந்திருந்த பணியமர்த்துதல் நடவடிக்கை, நவம்பரில் வேகம் பெற்றுள்ளது. செப்டம்பர் மற்றும் நவம்பரில் கட்டுமானம், மோட்டார் வாகனம், வங்கி ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு, அதிக மாற்றமின்றி காணப்பட்டது. இருப்பினும், அக்டோபரை விட, நவம்பரில் இத்துறைகளின்வேலைவாய்ப்பு முறையே, 20 சதவீதம், 34 சதவீதம் மற்றும் 21 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.
அக்டோபரை விட, நவம்பர் மாதத்தில், தகவல் தொழில்நுட்பம், பீ.பி.ஓ., தொலைத்தொடர்பு துறை ஆகிய துறை களில் பணியமர்த்துதல் நடவடிக்கை வலுவடைந்துள்ளது. இத் துறைகளில் பணியமர்த்தப்பட்டவர்களின் எண் ணிக்கை முறையே, 29 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 14 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. மாதங்களின் அடிப் படையில், மென் பொருள் மற்றும் தயாரிப்புத் துறை வேலை வாய்ப்புகளுக்கான தேவை, 30 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.இதே காலத்தில், விற்பனை, கணக்கு மற்றும் மனித வள மேலாண்மை துறைகளுக்கான பணியாளர் தேவைப்பாடு முறையே, 35 சதவீதம், 31 சதவீதம் மற்றும் 22 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)