பதிவு செய்த நாள்
14 டிச2011
00:34
சென்னை:மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில், டில்லியில் நடைபெற உள்ள சர்வதேச வாகன கண்காட்சியில்,புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.சர்வதேச வாகன கண்காட்சி வரும் ஜன., 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை டில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில்,உள்நாடு மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வாகனங்கள், உதிரிபாகங்கள் போன்ற வற்றின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. மாருதி சுசூகி இந்தியா நிறுவனம்,மூன்று புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது.குறிப்பாக, குறைந்த விலை பிரிவில்,"காம்பேக்ட் எம்.பி.வி - எர்டிகா மற்றும் கான்செப்ட் காம்பேக்ட் எஸ்யுவி ஆகிய இரண்டு மாடல் களில் கார்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக, இந்நிறுவனத்தின் நிர்வாக செயல் அதிகாரி (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) மாயங்க் பரீக் தெரிவித்தார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|