பதிவு செய்த நாள்
14 டிச2011
00:35
புதுடில்லி:இந்தியாவின் முன்னணி 500 நிறுவனங்கள் பட்டியலில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.), தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக,முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.இதேபோன்று,ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் (ஆர்.ஐ.எல்.) நிறுவனமும், தொடர்ந்து இரண்டாவது இடத்தை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.
சர்வதேச வர்த்தக இதழான பார்ச்‹ன், அதன் இந்தியப் பதிப்பில், வருவாய் அடிப்படையில் சிறந்து விளங்கும், 500 இந்திய நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில்,இந்த 500 நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்றுமுதல், 45 லட்சத்து 79 ஆயிரத்து 911 கோடி ரூபாயாக உள்ளது.இதில், ஐ.ஓ.சி.,யின் ஆண்டு விற்றுமுதல், 3 லட் சத்து 23 ஆயிரத்து 113 கோடி ரூபாயாகவும், ஆர்.ஐ.எல்., விற்றுமுதல், 2 லட்சத்து 72 ஆயிரத்து 923 கோடி ரூபாயாகவும் உள்ளது.
இந்நிறுவனங்களை தொடர்ந்து,பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம்,1 லட்சத்து 56 ஆயிரத்து 580 கோடி ரூபாய் விற்றுமுதலுடன்,மூன்றாவது இடத்தையும்,ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா,1 லட்சத்து47ஆயிரத்து844 ரூபாய் விற்றுமுதலுடன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.
அடுத்த இடங்களை, இந்துஸ்தான் பெட்ரோலியம் (5வது இடம்), டாட்டா மோட்டார்ஸ் (6வது இடம்), ஓ.என்.ஜி.சி. (7வது இடம்), டாட்டா ஸ்டீல் (8வது இடம்), ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் (9வது இடம்) மற்றும் கோல் இந்தியா (10வது இடம்) ஆகியவை பிடித்துள்ளன.இந்த பட்டியலில், முதல் பத்து இடங்களில், பொதுத் துறை நிறுவனங்கள் ஆறு இடங்களையும், தனியார் நிறுவனங்கள் நான்கு இடங்களையும் கைப்பற்றி உள்ளன.
மேற்கண்ட நிறுவனங்களின் மொத்த விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது,21.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாண்டு, இந்த பட்டியலில், புதிதாக 57 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|