பதிவு செய்த நாள்
14 டிச2011
16:12
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கி சரிவுடனேயே முடிந்தது வர்த்தகம். வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 121.37 புள்ளிகள் குறைந்து 15881.14 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 37.35 புள்ளிகள் குறைந்து 4763.25 புள்ளிகளோடு காணப் பட்டது. ஒரே நாளில் ஐரோப்பிய கடன் சுமையால் வால் ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட சரிவு, ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்டவைகளின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் 65 புள்ளிகள் சரிவுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 65.19 புள்ளிகள் சரிந்து 15,937.32 புள்ளிகளாகவும், நிஃப்டி 22.45 புள்ளிகள் சரிந்து 4778.15 புள்ளிகளாகவும் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|