பதிவு செய்த நாள்
17 டிச2011
01:05
புதுடில்லி:நடப்பு காலண்டர் ஆண்டில், சென்ற நவம்பர் வரையிலான 11 மாதங்களில், நம் நாட்டில் இருந்து 8 கோடி டன் இரும்பு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, சென்ற 2010ம் ஆண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட 2.2 கோடி டன் குறைவாகும்.கர்நாடகா மற்றும் ஒடிசாவில், சட்டவிரோத சுரங்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக, இரும்புத் தாது உற்பத்தி குறைந்துள்ளது. குறிப்பாக சென்ற நவம்பர் மாதம், 51 லட்சம் டன் என்ற அளவிற்கே இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட மூன்றில் ஒரு பங்கு குறைவு.ஒடிசா அரசு, ஆந்திராவின் கங்காவரம் மற்றும் காக்கிநாடா துறைமுகங்கள் வாயிலாக இரும்புத் தாது ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.
இவ்வாண்டு, இதுவரை பாரதீப் துறைமுகம் 1.4 கோடி டன் இரும்புத் தாது ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளது. ஆந்திராவின் இரு துறைமுகங்கள் வாயிலாக 40 லட்சம் டன் இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு, ஒடிசா அரசு, சாலை வழியிலான இரும்புத் தாது போக்குவரத்துக்கும் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2009-10ம் நிதியாண்டில், இந்தியா, மிக அதிகபட்சமாக 11.7 கோடி டன் இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்தது. இது, சென்ற 2010-11ம் நிதியாண்டில், 9.7 கோடி டன் என்ற அளவில் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|