பதிவு செய்த நாள்
18 டிச2011
05:05
புதுடில்லி : லைப் இன்‹ரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்.ஐ.சி.,) நிறுவனம், சென்ற ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான எட்டு மாதங்களில், பங்குச் சந்தைகளில், பல்வேறு நிறுவனப் பங்குகளில் மேற்கொண்ட முதலீடுகள் வாயிலாக 6,542 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
இது குறித்து பார்லிமென்டில், நிதித் துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா கூறியதாவது: நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலுமாக, எல்.ஐ.சி நிறுவனம், பங்குச் சந்தையில் 21 ஆயிரத்து
295 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனம், கடந்த 2009-10 மற்றும் 2010-11ம் நிதியாண்டுகளில், பங்குச் சந்தையில் செய்த முதலீடு முறையே 61 ஆயிரத்து 398 கோடி ரூபாய் மற்றும் 43 ஆயிரத்து 214 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. இந்த முதலீடுகள் வாயிலாக, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 17 ஆயிரத்து 55 கோடி ரூபாயும், 2009-10ம் நிதியாண்டில், 9,432 கோடி ரூபாய் என்ற அளவிற்கும் எல்.ஐ.சி., லாபம் ஈட்டியுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|