பதிவு செய்த நாள்
19 டிச2011
14:55
விருதுநகர் : கைத்தறி விற்பனை பொருட்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி மானியம் வழங்கப்படாததால், நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தவித்து வருகின்றன. தமிழகத்தில், 1,232 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களில், 3 லட்சம் கைத்தறி நெசவாளர்கள், உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் இலவச வேட்டி, சேலை, பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் உற்பத்தி செய்து வருகின்றனர். இது தவிர, வெளி மார்க்கெட்களில் விற்பனை செய்வதற்காக போர்வை, ஜமுக்காளம், சேலை, வேட்டி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கைத்தறி உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், நுகர்வோருக்கு, அரசு தள்ளுபடி மானியம் அறிவித்து வழங்கி வருகிறது.
அரசு தள்ளுபடி செய்யும் தொகையை கைத்தறித் துறைக்கு வழங்கும். கைத்தறித் துறை, அந்தந்த நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கும். 2010-11ம் ஆண்டுக்கான தள்ளுபடி மானியம், 100 கோடி ரூபாய் வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. இந்த நிலுவைத் தொகையும் கிடைக்காததால், கூட்டுறவு சங்கங்கள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ன. அரசு தள்ளுபடி மானியத்தை, உடனடியாக நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|