பதிவு செய்த நாள்
19 டிச2011
15:32
புத்தாண்டு தினம் மற்றும் அதற்கு முதல் நாளான, டிசம்பர் 31ல், தமிழகம் முழுவதும் உள்ள, "டாஸ்மாக்' கடைகள் மூலம், 200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு தட்டுப்பாடின்றி, "குடி'மகன்களுக்கு சரக்கு விற்பனை செய்யும் வகையில், தமிழகம் முழுவதும் செயல்படும், 6,946 கடைகளில், ஒவ்வொரு கடைக்கும், 15 நாள் விற்பனை செய்யக் கூடிய அளவுக்கு, தேவையான சரக்குகளை இருப்பு வைத்துக் கொள்ள, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களுக்கு, விழாக் காலங்களில் நடக்கும் சரக்கு விற்பனையை கருத்தில் கொண்டு, 60 சதவீதம் கூடுதல் சரக்குகள் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சரக்கு சப்ளை செய்யும் பணி நடந்து வருகிறது.புத்தாண்டுக்கு இன்னும் இரண்டு வாரமே உள்ள நிலையில், நேற்று மதியம் முதல் டாஸ்மாக் கடைகளுக்கான சரக்கு சப்ளை செய்யும் பணி துவக்கப்பட்டு, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக, ஐந்து நாட்களுக்கு தேவையான சரக்குகள் அனுப்பப்படுகிறது. அதை தொடர்ந்து, 15 நாட்களுக்கு தேவையான சரக்குகள் கடைகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|