பதிவு செய்த நாள்
19 டிச2011
17:01
புதுடில்லி : ட்யூயல் சிம் கார்டுகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவின் மொபைல் இறக்குமதி 13.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலாண்டில் 47 மில்லியன் மொபைல்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஒவ்வொரு காலாண்டிலும் மொபைல் இறக்குமதி 12 சதவீதம் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சி துறை நிறுவனமான ஐ.டி.சி., தெரிவித்துள்ளது. 2011ம் ஆண்டில் 184.4 மில்லியன் மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2015ல் 301 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் 63.4 சதவீதமாக அதிகரித்துள்ள ஸ்மார்ட் போன் இறக்குமதி, 2015ல் 77.5 மில்லியன் மொபைல்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|