பதிவு செய்த நாள்
20 டிச2011
00:48
மும்பை:கடந்த அக்டோபர் மாதத்தில், உள்நாட்டில், காசோலை வாயிலான பரிவர்த்தனை 8.53 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனையை விட, 6 சதவீதம் (9.07 லட்சம் கோடி ரூபாய்) குறைவாகும். கடந்த அக்டோபர் மாதத்தில், வங்கிகள், 11.34 கோடி காசோலைகளை பரிவர்த்தனை செய்துள்ளன. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்டதை விட, 8.9 சதவீதம் (12.44 கோடி காசோலைகள்) குறைவு.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - அக்., வரையிலான காலத்தில், வங்கிகள், 57.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கான காசோலைகளை பரிவர்த்தனை செய்துள்ளன. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இந்த பரிவர்த்தனை மதிப்பு, 58.23 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.சென்னை மண்டலத்தில், உள்ள வங்கிகள், சென்ற அக்டோபர் மாதத்தில், 60.20 லட்சம் காசோலைகளை கையாண்டுள்ளன. பரிவர்த்தனை மதிப்பு, 44 ஆயிரத்து 600 கோடி ரூபாயாகும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|