பதிவு செய்த நாள்
20 டிச2011
00:49
புதுடில்லி:நாட்டின் தேயிலைத் துறையின் சந்தை மதிப்பு, வரும் 2015ம் ஆண்டில் 33 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என, அசோசெம் அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு:இந்தியாவில் தேநீர் பருகுவோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதற்கேற்ப, மூலிகை தேநீர், ஐஸ் தேநீர் என பல வகையான பானங்கள் நுகர்வோரின் வரவேற்பை பெற்றுள்ளன. இதனால், தேயிலை பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.
தற்போது, தேயிலையின் சந்தை மதிப்பு 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இத்துறை, ஆண்டுக்கு 15 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. உலக தேயிலை உற்பத்தியில், இந்தியா 30 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது.உள்நாட்டில் பிராண்டட் தேயிலையின் சந்தை பங்களிப்பு 55 சதவீதமாகவும், பிராண்டு செய்யப்படாத தேயிலையின் பங்களிப்பு 45 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது. ஏராளமான நிறுவனங்கள், மதிப்பு கூட்டப்பட்ட தேயிலையை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. தேயிலை பருகுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு காரணமாகவும், இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
நாட்டின் தேயிலை தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 35 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்கள் 1,500 தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில், அசாம் 50 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.நடப்பு காலண்டர் ஆண்டில், அக்டோபர் வரையிலான பத்து மாத காலத்தில், நாட்டின் தேயிலை உற்பத்தி 84.7 கோடி கிலோ என்ற அளவில் உள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில், 81.3 கோடி கிலோவாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|