பதிவு செய்த நாள்
20 டிச2011
00:50
சென்னை:முத்ராரிகா நிறுவனம் சென்னை சேத்பட்டில் கைவினைப் பொருள் விற்பனையகத்தை திறந்துள்ளது. இதனை, கர்நாடகா பாடகி நித்தியஸ்ரீ மகாதேவன் திறந்து வைத்தார்.இந்தியாவில் மறந்துபோன திறமையான நெசவாளிகள், மண்பாண்ட கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமைகளை வெளிப்படுத்த முத்ராரிகா வாய்ப்பளித்து வருகிறது. ஜரோகா கோஜ், மைத்ரி, உத்சவ் போன்ற மறைந்து வரும், பழம் பெரும் கலைகளை மீட்டு அதற்கு புத்துயிர் அளிப்பதே இந்நிறுவனத்தின் நோக்கம். பல்வேறு கலை, சிற்பங்களை ஒரே கூரையின் கீழ் பெறும் வகையில் இந்த விற்பனையகம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த விற்பனையகத்தில், மேலும் சூட், புடவை, குர்தா, ஷûக்கள், பைகள், ஆபரணங்கள், மரச்சாமான்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும் என முத்ராரிகாவின் தலைமை செயல் அதிகாரி ஷீலா ராஜு தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|