பதிவு செய்த நாள்
20 டிச2011
00:52
புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து, 6,444 கோடி ரூபாய் பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.எம்.டி.என்.எல் நிறுவனம், டில்லி மற்றும் மும்பையிலும், நாட்டின் இதர பகுதிகளில் பி.எஸ்.என்.எல் நிறுவனமும் தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இந்த இரு நிறுவனங்களும், கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன. சென்ற 2010-11ம் நிதியாண்டு நிலவரப்படி, பி.எஸ்.என்.எல் நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் இருந்து, 5,341 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது. அதுபோன்று, எம்.டி.என்.எல். நிறுவனத்திற்கு, வாடிக்கையாளர்கள் 1,103 கோடி ரூபாயை பாக்கி வைத்துள்ளனர்.
இதே நிதியாண்டில், பி.எஸ்.என்.எல் நிறுவனம், முந்தைய ஆண்டுகளின் மொத்த நிலுவை தொகையை, 12 ஆயிரத்து, 587 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. எம்.டி.என்.எல் நிறுவனம், 863 கோடி ரூபாய் பாக்கியை வசூலித்துள்ளது.இதே நிதியாண்டில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் 6,000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. எம்.டி.என்.எல் நிறுவனத்தின் இழப்பு, 2,800 கோடி ரூபாயாக உள்ளது.நிலுவையில் உள்ள பாக்கி குறித்து, வாடிக்கையாளர்களுக்கு ஐ.வி.ஆர்.எஸ் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகளின் வாயிலாக நினைவூட்டும் தகவல்களை இரு நிறுவனங்களும் அனுப்பி வருகின்றன. மேலும் பல தள்ளுபடி திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.
இது தவிர, நிலுவைத் தொகையை வசூலிக்கும் பணிக்காக, மாதத்தில் குறைந்தது, 1 லட்ச ரூபாய் வசூலிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், முகவர்கள் மற்றும்
நிறுவனங்களை தேர்வு செய்துள்ளது. ஓராண்டு வரையிலான இப்பணிக்காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கவும் இவ்விரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இழப்பை கட்டுப்படுத்தும் பொருட்டு, ஊழியர்களுக்கு தன் விருப்ப ஓய்வு திட்டத்தை செயல்படுத்தவும் இந்நிறுவனங்கள் முனைந்துள்ளன.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில், 2 லட்சத்து 80 ஆயிரம் ஊழியர்களும், எம்.டி.என்.எல் நிறுவனத்தில், 45 ஆயிரம் பேரும் பணியாற்றுகின்றனர்.பொதுத்துறையை சேர்ந்த இந்த இரண்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.இதனால், தொலைத் தொடர்புத் துறையில் இந்நிறுவனங்களின் பங்களிப்பு வெகுவாக சரிவடைந்து வருகிறது. சென்ற அக்டோபர்31ம் தேதி நிலவரப்படி, பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களின் ஜி.எஸ்.எம். மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை முறையே, 9.62 கோடி மற்றும் 56 லட்சம் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|