பதிவு செய்த நாள்
20 டிச2011
00:56
சென்னை:தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி, நாடு தழுவிய அளவில், புதிதாக 10 கிளைகளை துவங்கியுள்ளது.கரூர் வைஸ்யா வங்கியின் இப்புதிய கிளைகள் ஆந்திராவில், ஐதராபாத் - சந்தோஷ் நகர், தனுகூ, கஜபதி நகரம் மற்றும் பூபிளீ ஆகிய இடங்களிலும், கேரளாவில், திருபுனித்ராவிலும், தமிழகத்தில், கோவைக்கு அருகில் கலாப்பட்டி, மகாராஷ்டிராவில் பீவண்டி, மேற்கு வங்கத்தில் ஜோகா, பரிபூர் மற்றும் கரக்பூர் ஆகிய இடங்களிலும் இடம் பெற்றுள்ளன.இதையடுத்து, இவ்வங்கியின் மொத்த கிளைகள் எண்ணிக்கை, 428 ஆக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரையிலுமாக, இவ்வங்கி, புதிதாக 59 கிளைகளை தொடங்கியுள்ளது.கூடிய விரைவில், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து, கிரெடிட் கார்டுகளையும், அறிமுகம் செய்ய உள்ளது என, இவ்வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கே.வெங்கட்ராமன் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|