பதிவு செய்த நாள்
20 டிச2011
09:28
மும்பை: ஐரோப்பிய கடன் நெருக்கடி,ஆசிய சந்தைகளில் சரிவு, மந்தமான தொழில்துறை வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் கடந்த 3 நாட்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தைகள், வாரத்தின் முதல் நாளான நேற்று சரிவுடன் தொடங்கி சரிவுடனேயே முடிவுற்றது. நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இதர ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இது, இந்திய பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாட்டின் நிதி பற்றாக்குறை மற்றும் நடப்பு கணக்கில், பற்றாக்குறை ஏற்படும் என்ற நிலைப்பாட்டாலும், பங்கு வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை வார வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.15 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 56.78 புள்ளிகள் அதிகரித்து 15436.12 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 22.70 புள்ளிகள் அதிகரித்து 4635.80 புள்ளிகளோடு காணப் பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|