பதிவு செய்த நாள்
21 டிச2011
00:09
சென்னை: மிர்க் எலக்ட்ரானிக் நிறுவனம், ஒனிடா என்ற பெயரில், நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்திலான,"ஸ்மார்ட் எல்.இ.டி. 3டீ' டிவியை அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து, மிர்க் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் (விற்பனை மற்றும் சேவை) சஞ்சீவ் கே.ஜெயின் கூறியதாவது:வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதில், நிறுவனம் முன்னோடியாக திகழ்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக, நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.தற்போது, "3டி' மற்றும் இணையதளம் வசதி கொண்ட, "டிவி' விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நிறுவனத்தின், ஸ்மார்ட் எல்.இ.டி. "3டீ' "டிவி', ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், இணையதளத்தை தொடர்பு கொள்வது உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.தற்போது, 32 அங்குலம் கொண்ட, ஸ்மார்ட் "டிவி' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், நிறுவனத்தின் விற்றுமுதல் 2,000 கோடி ரூபாயாக இருந்தது. இதனை, 3,000 கோடி ரூபாயாக (50 சதவீதம் வளர்ச்சி) அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஜெயின் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|