பதிவு செய்த நாள்
21 டிச2011
15:46
நடப்பு 2011-12 சர்க்கரை பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), டிசம்பர் 15ம் தேதி வரையிலான காலத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி 18.7 சதவீதம் அதிகரித்து 45.84 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 38.63 லட்சம் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 452 சர்க்கரை ஆலைகள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டின் இதே காலத்தில் 445 சர்க்கரை ஆலைகள் செயல்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. மஹாராஷ்டிர மாநில ஆலைகள் நடப்பு பருவத்தில் சற்று தாமதமாகவே செயல்பட துவங்கின என்றாலும் உற்பத்தியில் காணப்பட்டுள்ள இந்த உயர்வு மகிழ்ச்சி தரும் அம்சமாக உள்ளது.இந்த காலகட்டத்தில், மஹாராஷ்டிர மாநிலத்தின் பங்கு கடந்த ஆண்டின் இதே காலத்திலான உற்பத்தியை விட 1.25 லட்சம் டன் அதிகரித்து 17.50 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.அதே போல், உத்தர பிரதேச மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி 12.85 லட்சம் டன்னாக உயர்ந்து காணப்படுகிறது. இம்மாநிலம் கடந்த ஆண்டின் இதே காலத்தில் 8.55 லடசம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்திருந்தது. கர்நாடக மாநிலத்தின் உற்பத்தியும் கடந்த ஆண்டின் இதே காலத்திலான உற்பத்தி அளவான 7.35 லட்சம் டன்னிலிருந்து 8.25 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|