பதிவு செய்த நாள்
21 டிச2011
17:01
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடனேயே முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 510.13 புள்ளிகள் அதிகரித்து 15685.21 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 148.95 புள்ளிகள் அதிகரித்து 4693.15 புள்ளிகளோடு காணப் பட்டது. சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக சர்வதேச சந்தைகள் இன்று ஏற்றம் அடைந்துள்ளன. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கடுமையாக சரிந்து வந்த இந்திய பங்குச் சந்தைகள் 320 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 320.10 புள்ளிகள் உயர்ந்து 15,495.18 புள்ளிகளாகவும், நிஃப்டி 97.10 புள்ளிகள் உயர்ந்து 4641.30 புள்ளிகளாகவும் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|